Saturday, September 27, 2014



"என்ன சாமா..  ஷாக் ஆயிட்டியாடா.?  என்ன பண்ணுவது.?  சில உண்மைகளை
வெளிப்படையா பகிர்ந்துக்கும் போது இப்படி பட்ட அதிர்ச்சிகளையும் நாம் பேஸ்
பண்ணித்தான் ஆகணும்." - என்றேன் நான்.


"ரமணி..  நீ எனக்கு வாழ்நாள் முழுக்க கூடவே வரணும் என்று நான் ஆசைப்படுறது
தப்புன்னு நினக்கிறாயாடா?" -  சாமாவின் கேள்வியில் ஆதங்கம் நிரம்பி
இருந்தது.



"உன் ஆசையிலே தப்பு இல்லே சாமா?  ஆனா அது நிறைவேறுமா?  ஏதோ ஒரு வேகத்துலே உன் உடல்நிலைபற்றிய ஒரு ஆதங்கத்துலே நீ இப்படி பேசுறே?  உன்னை எந்த பெண்ணுமே கல்யாணம் செய்துக்க மாட்டாள் என்று நீயாவே நினைச்சுகிட்டு என்னை உன் லைப் பார்ட்னரா சேத்துக்கணும் என்று  நெனைக்கிறே. அது நடக்கக்கூடிய
காரியமா என்று எந்த யோசனையும் இல்லாம நீயா உணர்ச்சி வேகத்துலே இப்படி
முடிவெடுக்கற மாதிரிதான் எனக்கு தோணுதுடா." - என்றேன் நான்.



"அப்படி எல்லாம் இல்லேடா.  ஐ லவ் யூடா.  லவ் யு இண்டென்ஸ்லி. " என்றான் சாமிநாதன்.



"சாமா..  உன்னுடைய இந்த அன்புக்கு நான் தகுதியானவன் இல்லேடா.  அதனால தான் நான் தயங்குறேன்." என்றேன் நான்.



"ஏண்டா இப்படிச் சொல்லறே.  நீ என்கிட்டே அன்பை செலுத்துறே.  பாசமா
இருக்கே.  இப்போ நான் உன் மேல என் தாபத்தை தீர்துக்கிட்டப்போ கூட நீ
மறுக்காம என்னோட கோ-ஆபரேட்டிவ்வா நடந்துகிட்டியே.  நீயும் என் மேல அன்பா
இல்லாவிட்டால் இப்படி இருக்க சம்மதிச்சு இருக்கமாட்டாயே." - என்று
வாதிட்டான் சாமிநாதன்.



"சாமா.  நான் உன் ஒருத்தன் கிட்டே மட்டும் இப்படி இருக்கவில்லையடா.  என்
ஹாஸ்டல் ரூம்மேட் ராபர்ட் என்னை வலுவா புணர்ந்து அவன் பிடிக்குள்ளே
வச்சுகிட்டு இருக்கான்.  அது மட்டும் இல்லேடா.  நான் ஒரு விதத்தில் மிகவும்
பலவீனமானவன்.  அட்டகாசமான உடற்கட்டோட ஆண்களைப் பார்த்தால் நான் என் வசம்
இழந்து விடுவேண்டா.  ஆனால் அதை நான் தப்பாக நினைக்கவில்லை.  என்னைப்
பொருத்தவரை நட்பின் உச்ச நிலையே  தன்னை அப்படியே முழுசாக நண்பனுக்கு
கொடுப்பதுதான்.  என் மனசுக்கு நெருங்கி வந்துட்டா அவங்களுக்கு என்னையே
கொடுக்க கூட ரெடியா இருப்பேன்.  ஒருத்தருக்கு என்னை கொடுப்பதாலே அடுத்தவங்க
மேல எனக்கு ஏற்படுற அன்பு கொஞ்சம் கூட குறைந்துவிடாது.  ஒரு தீபத்தாலே
எத்தனை விளக்குகளை வேண்டுமானாலும் ஏற்றலாம்.  அதனாலே முதல் தீபத்தின்
பிரகாசம் குறைந்துவிடாது இல்லையா?  அது போலத்தான் என் அன்பும்." - என்றேன்
நான்.


வியப்போடு நான் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான் சாமிநாதன்.

"டேய். ரமணி.  நீ சொல்லறது அன்பையும் நட்பையும் பொருத்தவரைக்கும் சரியா
இருக்கலாம்.  ஆனால் உடம்பை இப்படி கொடுக்கறது சரியா. ?"  -  என்று கேட்டான்
சாமிநாதன்.


"ஹேய்..இப்போ நீ என்னை யூஸ் பண்ணிகிட்டே.  என்னை கேட்டா, என் விருப்பத்தை
ஒரு வார்த்தை கேட்டுவிட்டா என்னை அனுபவிச்சே.  இப்போ என்று இல்லே.. முதல்
முதலா என்னை உங்க வீட்டுலே வச்சு கிஸ் பண்ணினியே.  அது கூட என் பெர்மிஷன்
கேட்டுவிட்டா செய்ஞ்சே?  _ என்று கேட்டேன் நான்.



"அது வந்துடா..உன்னை பார்த்தவுடனே எனக்கு அப்படி செய்யணும் என்று தோணிச்சு.  அதான் அப்படி நடந்துக்கிட்டேன்." என்றான் சாமிநாதன்.



"உனக்கு மட்டும் என்று இல்லேடா..  என்னைப் பார்க்குற - கூட பழகுற நெறைய
பேருக்கு இப்படியே தோணுது.  அவங்க உடனே அவங்க ஆசைய இப்படி நடந்துகிட்டு
நிறைவேத்திக்கிறாங்க.  ஆனால் அதுக்கு முன்னாலே யாரும் என் விருப்பத்தை
பற்றி ஒரு வார்த்தை கூட கேக்குறதே இல்லே.  இந்த விதத்துலே நீ, ராபர்ட்,
பிரகாஷ் எல்லாருமே ஒரே மாதிரிதான்.  நானும் அதுக்கு வருத்தப்படுறது இல்லே.
ஏனென்றால் என் உணர்ச்சிகளும் தூண்டப்பட்டு என் விருப்பத்தின் பேரில் தானே
இதுவும் நடக்கிறது.  அதற்கு மற்றவர்களை குற்றம் சொல்வது சரியல்ல. அதனாலே
நான் இதை பெரிசா நெனைக்கறது இல்லே.  ஆனால் நீ சொல்வது போல வாழ்நாள் முழுக்க உன் கூட வருவது கஷ்டம்டா.  ஏனென்றால் நான் ஒன்றும் யாரும் இல்லாத அனாதை அல்ல.  எனக்கும் பெத்தவங்க இருக்காங்க.  அவங்களுக்கு கட்டுப்பட்டவன் நான். இந்த மாதிரி இயல்புக்கு மாறான ரிலேஷன்ஷிப்லே நான் ஈடுபட அவங்க சம்மதிக்க
மாட்டாங்க.  உங்க அம்மா கூட அப்படித்தான்.  உனக்காக சம்மதம் சொன்னாலும் அது
அரைமனதாக சொன்னதாகத்தான் இருக்கும்.  அவங்களை தப்பு சொல்ல முடியாதுடா. 
ஏனென்றால் நாம வளர்ந்த விதம், நம்ம கல்ச்சர் இதுக்கு ஒத்துக்காது என்ற
எண்ணம் இருக்கு.  அது மாறினால் நீ நெனைக்கிற மாதிரி நடக்கலாம்.  பட் ஆனா
அதுக்கு நெறைய வருஷங்கள் ஆகணும். " என்று படபடவென பேசினேன் நான்.



"அப்படி என்றால் நான் வாழ்நாள் முழுக்க தனியா தான் இருக்கனுமாடா." என்றான் சாமா.



"ஏண்டா அப்படி நினைக்கிறே?  உனக்கு நல்ல மனசு இருக்கு..  கட்டான உடம்பும்
இருக்கு.  நல்லா படிக்கவும் செய்கிறாய்.  படிச்சு முடிச்சதும் உங்க மாமா
சிபாரிசுலே ஒரு நல்ல வேலை கிடைக்கவும் வாய்ப்பு இருக்கு.  உன்னை கல்யாணம்
பண்ணிக்க பொண்ணுங்களுக்கு கசக்குமா என்ன?" என்றேன் நான்.



"எனக்கு கட்டான உடம்புன்னு சொல்லுறே.  ஆனால் உள்ளே உளுத்துப்போன ஒடம்புடா
இது.  வலிப்பும், ஆஸ்த்மாவும் குடியேறி இருக்குற ஒடம்புடா இது.  இதை
கல்யாணம் பண்ணிக்க யாருமே வரமாட்டாங்கடா. " என்றான் சாமிநாதன்
விரக்தியுடன்.



"சரிதான்..  சாமா.. இந்த உலகத்துலே யாருக்கும் ஏதாவது குறை கண்டிப்பா
இருக்கும்.  அப்படி பார்த்தால் வலிப்பு நோய் இருக்கறவன் நீ ஒருத்தன்
மட்டும் தானா?  ஆஸ்த்மா உன் ஒருவனுக்கு மட்டுமா இருக்கு.?  இப்படி ஒவ்வொரு
குறைபாடு உள்ளவங்களும் இப்படி நினைச்சாங்கன்னா இந்த உலகத்துலே இருக்கற 70
சதவீதம் பேரு தனியாத்தான் இருக்கணும்.  இதெல்லாம் ஒரு குறைபாடு இல்லேடா..
சாமா.  வியாதி..  இதை எல்லாம் சரிபண்ணிக்கலாம்.  இனிமேல் நீ இப்படி எல்லாம்
பேசவே கூடாது..  சரியா.  உன் உடற்குறைய மறந்துட்டு எப்பவும் சந்தோஷமா
இருக்கணும்.  நான் உன் கூடவே வாழ்நாள் முழுக்க ஒரு நல்ல தோழனா வருவேன்
சாமா.  கவலைப்படாதே.  இப்போ நமக்கு படிக்கற பருவம்.  வேற எதைபத்த்தியும்
நாம நினைக்க வேண்டாம்.  நாளைக்கு நடக்கபோறதை பத்தி இப்பவே ஏன்
கவலைப்படணும்.  இப்போ நடக்கவேண்டியதை மட்டும் கவனிப்போம்.  படிப்புலே
கான்சென்ட்ரெட் பண்ணுவோம்.  வாழ்க்கை போகிற பாதையிலே நாம பயணம் பண்ணிட்டே இருப்போம்.  வருவது நல்லதா இருந்தா ஏத்துக்குவோம். கெட்டதா இருந்தா அதை ஓவர்கம் பண்ணிட்டு போவோம்.  நான் சொன்னது சரிதானே. " என்றேன் நான்.



என்னையே பார்த்துக்கொண்டிருந்த சாமிநாதன், "ரமணி.. ரியலி கடவுள் என் மேல
கருணை வச்சு உன்னை நண்பனா கொடுத்து இருக்காருடா.  ஐ ஆம் வெரி ப்ரௌட் ஆப்
யு. ஐ லவ் யு டா. " என்றவன் என்னை இழுத்து அணைத்து வெறித்தனமாக முத்தமழை பொழிய ஆரம்பித்தான் சாமிநாதன்.



என் கன்னங்கள் அவனது முத்தங்களால் சிவக்க ஆரம்பித்தன. 



ஆனால்..  அன்று மாலை அந்த கன்னங்கள் ராபர்ட் கொடுக்கப்போகும் அறைகளால் சிவக்கப் போகின்றன என்று எனக்கு அப்போது தெரியாது.



(முரட்டுத்தனம் தொடரும்...)

No comments:

Post a Comment