40. உன்னை மட்டும் அருகினில் வைத்து தினம் தினம் சுற்றி வருபவரோ
நீ கற்றுக்கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும் முத்தமிழ் வித்தகரோ
கலை முற்றும் உணர்ந்தவரோ காதல் மட்டும் தெரிந்தவரோ. - கவிஞர் மாயவநாதன்
சாமிநாதனின் வீட்டிலிருந்து நான் கிளம்புவதற்கு மாலை நேரமாகி விட்டது.
உடனே கிளம்பி கல்லூரிக்கு வந்துவிடலாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் எங்கே?
அவன் தான் தன்னுடைய அன்புப் பிடிக்குள் என்னை அடக்கிக் கொண்டுவிட்டானே!
ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வருவதற்குள் அவன் அம்மா வேறு வந்துவிட்டார்.
நடந்த சம்பவத்தைக் கேட்டதும் அதை லகுவாக அவர் எடுத்துக்கொண்ட நேர்த்தி என்னை வியக்க வைத்தது.
"இது நான் எதிர்ப்பார்த்ததுதான். இப்படியும் ஒரு நாள் நடக்கும் என்று நினைத்திருந்தேன். நல்ல வேலை.. பஸ்ஸிலே வரும்போதோ இல்லே ரோடை க்ராஸ் பண்ணும் போதோ வராம க்ளாஸ் ரூமிலே இருக்குறப்போ நடந்ததே. அதுவரைக்கும் நிம்மதி." என்றார் அவர்.
தொடர்ந்து" மாத்திரையை போட்டுக்கிட்டியா சாமா" என்றார் அவர்.
"நான் போட்டுக்கிறேன் அம்மா. ஆனா ரமணி இப்போ போகவேணாமுன்னு சொல்லும்மா. அவனோட கொஞ்சம் பேசிக்கிட்டு இருக்கேன். அதுவே எனக்கு ரிலாக்ஸ்டா இருக்கும்" என்றான் அவன்.
அவனது வேண்டுகோளை தட்ட முடியாமல் அங்கேயே இருந்துவிட்டு கிளம்பும்போது மாலை நேரமாகி விட்டது.
பஸ் நிறுத்தத்துக்கு வந்து 12-பி பேருந்தில் ஏறி அமர்ந்த பிறகும் சாமிநாதனின் வார்த்தைகள் என் மனதில் பதிந்திருந்ததை உணர்ந்தேன்.
பாவம் .. ரொம்ப நல்லவன். அன்பானவன். அன்புக்கு ஏங்கி தவிப்பவன்.
வாழ்க்கையில் நிறைய இழந்துவிட்டவன். ஆனாலும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கிறான்.
இவனுக்கு ஒரு நல்ல நண்பனாக முடிந்த அளவுக்கு அவன் மனதுக்கு ஆறுதலாக இருக்கவேண்டும்.
ஒரு வார்த்தை கூட அவன் மனதை காயப்படுத்தும்படி பேசி விடவே கூடாது.
சட்டென்று ராபர்ட்டின் நினைவு வந்தது.
அதன் பிறகு தான் அன்றைய தேர்தலைப் பற்றியும், காலையிலேயே அவன் சொன்னதுபோல எனது வாக்கை பிரகாஷுக்கு பதிவே பண்ணாமல் வந்துவிட்டிருக்கிறேன் என்பதும் நினைவுக்கு வந்தது.
இதை அவன் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறானோ?
சாதாரணமாகவே எளிதில் உணர்ச்சி வசப்பட்டு கோபம் மட்டுமே முன்னுக்கு நிற்கும் அவன் இதை எளிதாக எடுத்துக்கொள்ளவா போகிறான்..?
என்ன செய்வான்?
கண்டபடி பச்சை பச்சையாக பேசி திட்டுவான். கத்தக்கூடச் செய்வான்.
இன்னும் சொல்லப்போனால் இரவு அம்மணமாகப் படுக்க வைத்து அதே நேரம் தொடாமலே இருப்பான். அவ்வளவுதானே.
அவன் என்ன செய்தாலும் நான் நிதானம் இழக்காமல் இருக்கவேண்டும்.
முதல் நாளிரவு இருளில் முகம் தெரியாவிட்டாலும் என்னிடம் காதலாகிக் கசிந்தானே!
அடிமனதில் காதல் இருப்பதால் தான் சற்று அதிகப்படியான உரிமை எடுத்துக்கொண்டு என்னை அவனுடைய பொண்டாட்டி சீ சீ.. தப்பு வைப்பாட்டியாக (அப்படித்தானே அவன் சொல்லுகிறான்!) வச்சுக்கிட்டு இருக்கான். அப்படித்தானே என்னை நடத்துகிறான்.
அதனால் அவனை சுலபமாக சமாளித்துவிடலாம் ..
அமிர்தாஞ்சன் நிறுத்தத்தில் பேருந்து நின்றதும் இறங்கி கல்லூரி ஹாஸ்டலை அடைந்தேன் நான்.
தாழிடப்பட்டிருந்த கதவைத் தட்டியதும் திறந்தான் ராபர்ட்.
உள்ளே நுழைந்தேன்.
உள்ளே.. கட்டிலில் பிரகாஷும் அமர்ந்திருந்தான்.
"அட. பிரகாஷ்.. நீங்க எப்போ வந்தீங்க...?" நான் கேள்வியை முடிக்கவில்லை.
"ஓத்தா எங்கேடா போய் சுத்திட்டு வரே?' குரலை உயர்த்தியபடி கேட்டான் ராபர்ட்.
அதிலிருந்த கடுமை என்னை சிலிர்க்கவைத்தது.
"அது வந்து..." என்று நான் பேச ஆரம்பிக்கும் முன்பே. "இன்னிக்கு தேர்தலிலே ஓட்டுக்கூட போடாம .. எவனை ஊம்பப் போனே." என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்த ராபர்ட்.
பளார் என்று என் கன்னத்தில் அறைந்தான்.
ஒருகணம் நிலை குலைந்து போனேன் நான்.
(முரட்டுத்தனம் தொடரும்..)
No comments:
Post a Comment