29"தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ - அந்த
தேவலோக மன்னவனும் நீயோ ..- கவிஞர் முத்துலிங்கம்.
"என்ன சாமா. இது. ?" என்று அவன் பிடியில் இருந்து திமிறி விடுபட்டேன் நான்.
சாமிநாதனின் முகம் சுருங்கியது.
"ஸாரிடா. உனக்கு பிடிக்கலைனா வெரி வெரி ஸாரி." - என்றான் அவன்.
"என்னடா நீ. ? இதுக்கெல்லாம் போய் ஸாரி சொல்லிக்கிட்டு.." என்றேன் நான்.
"அப்படி இல்லேயடா. உனக்கு பிடிக்காததை செய்தால் மன்னிப்பு கேக்கணும் இல்லையா ?" என்றான் அவன். அவன் குரல் குற்ற உணர்ச்சியில் கரகரத்தது.
"பிடிக்கலைன்னு நான் சொன்னேனா? இப்படி இங்கே வச்சு தைரியமா முத்தம் கொடுக்குறியே. அம்மா பாத்துட்டா என்ன நினைப்பாங்க?" என்றேன் நான்.
"என்னமோ உன் முகத்தை பாக்க பாக்க கிஸ் பண்ணனும்னு தோணிடுத்து. என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியலே அதான் சட்டுன்னு பண்ணிட்டேன்." என்றான் அவன்.
அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தேன். அதில் கள்ளம் இல்லை.. கபடம் இல்லை.
நான் ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன்னால் சுவையான அரிசி மாவு மோர்க்களியை சூடாக தட்டில் ஏந்தியபடி அவன் அம்மா வரவே.. மேற்கொண்டு எங்கள் பேச்சு தடைப் பட்டது.
சாப்பிட்டு முடித்து மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். எனக்கென்னமோ அவனது அம்மாவைப் பார்க்க பார்க்க என் சொந்த அம்மாவைப் பார்ப்பது போன்ற பிரமை ஏற்பட்டது.
ரொம்ப உரிமையோடு மூவரும் பேசிக்கொண்டிருந்தோம்.
நேரம் சென்றது. காலேஜ் விடும் நேரம் ஆகிக்கொண்டிருந்தது. நான் வேறு ஹாஸ்டலுக்கு செல்லவேண்டுமே.
அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு திரும்பினேன்.
பஸ் நிறுத்தம் வரை சாமிநாதனும் வந்தான்.
அங்கு நின்று பேசிக்கொண்டு இருந்தோம். கூட்டாம் அதிகம் இல்லை. இருந்த இரண்டொருவரும் அவர்களது பஸ் வந்துவிடவே ஏறிச்சென்று விட்டனர்.
நிழற்குடைக்குள் நாங்கள் இருவர் மட்டுமே நின்று நின்று கொண்டிருந்தோம்.
என்னை நெருங்கி
தோள்மீது கை போட்டு அணைத்த மாதிரி நின்று கொண்டிருந்தான் சாமிநாதன். அவனது
அணைப்பு எனக்கு வேண்டி இருந்தது. பிடித்தும் இருந்தது. ஆகவே நான்
தடுக்கவே இல்லை.
"ஆனாலும் உனக்கு
"தில் " அதிகம்டா." என்றேன் நான்.
"என்னடா இப்படி
சொல்லறே?" என்று கேட்டான் சாமிநாதன்.
"பின்னே என்ன?
வீட்டுலே ரூம் கதவை கூட சாத்திக்காம என்னை இழுத்து வச்சு முத்தம்
கொடுக்கறே. அம்மா வந்து இருந்தா ..? எனக்கு இப்போ நினைச்சாலும் படபடப்பா
இருக்கு தெரியுமா?' என்றேன் நான்.
கலகலப்பாக
சிரித்தான் சாமிநாதன்.
"நான் யாருக்குடா
கொடுத்தேன். என் ரமணிக்கு தானே கொடுத்தேன். அதான் யாரும் பாக்கலே
இல்லே.? அதான் அய்யாவோட டாலேன்ட்." என்று பெருமிதத்தோடு சொன்னான் அவன்.
"நல்ல டாலேன்ட்
தான். இந்த டாலன்ட்டை படிப்பில காட்டினா nallaa இருக்குமே. " என்றேன்
நான்.
நான் ஏற வேண்டிய
பஸ் வந்தது. ஆனால் ஏற விடவில்லை அவன்.
"அடுத்த பஸ்லே
போடா. " என்று சொல்லி சொல்லியே மூன்று நான்கு பஸ்களை தவறவிட்டு அந்த
நிழற்குடைக்குள் என்னை அணைத்து முகத்தோடு முகம் வைத்து நெருக்கமாக நின்று
பேசிக்கொண்டிருந்தான் அவன்.
"யாராவது போறவங்க
வரவங்க பார்த்தால் என்னடா நினைப்பாங்க". அழாத குறையாக நான் கேட்டாலும்
மனம் அந்த நெருக்கத்தை விரும்பியது.
ஒருவழியாக
ஐந்தாவது பஸ்ஸில் ஏறி அமிர்தாஞ்சன் நிறுத்தத்தில் இறங்கி கல்லூரி ஹாஸ்டலை
நான் அடைந்தபோது மணி ஐந்தரை ஆகிவிட்டிருந்தது.
ரூமுக்குள்
நுழைந்தேன் நான்.
"சாருக்கு கிளாஸ்
இப்போ தான் முடிஞ்சதா? எங்கே போய் சுத்திட்டு வரே.?" ராபர்ட்டின் குரலில்
கேலியும் குத்தலும் தெறித்தது.
என்ன பதில்
சொல்வது என்று புரியாமல் ஒரு கணம் தடுமாறி நின்றேன் நான்.
(முரட்டுத்தனம் தொடரும்...)
காமன் போல வந்திருக்கும் வடிவோ - அந்த
தேவலோக மன்னவனும் நீயோ ..- கவிஞர் முத்துலிங்கம்.
"என்ன சாமா. இது. ?" என்று அவன் பிடியில் இருந்து திமிறி விடுபட்டேன் நான்.
சாமிநாதனின் முகம் சுருங்கியது.
"ஸாரிடா. உனக்கு பிடிக்கலைனா வெரி வெரி ஸாரி." - என்றான் அவன்.
"என்னடா நீ. ? இதுக்கெல்லாம் போய் ஸாரி சொல்லிக்கிட்டு.." என்றேன் நான்.
"அப்படி இல்லேயடா. உனக்கு பிடிக்காததை செய்தால் மன்னிப்பு கேக்கணும் இல்லையா ?" என்றான் அவன். அவன் குரல் குற்ற உணர்ச்சியில் கரகரத்தது.
"பிடிக்கலைன்னு நான் சொன்னேனா? இப்படி இங்கே வச்சு தைரியமா முத்தம் கொடுக்குறியே. அம்மா பாத்துட்டா என்ன நினைப்பாங்க?" என்றேன் நான்.
"என்னமோ உன் முகத்தை பாக்க பாக்க கிஸ் பண்ணனும்னு தோணிடுத்து. என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியலே அதான் சட்டுன்னு பண்ணிட்டேன்." என்றான் அவன்.
அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தேன். அதில் கள்ளம் இல்லை.. கபடம் இல்லை.
நான் ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன்னால் சுவையான அரிசி மாவு மோர்க்களியை சூடாக தட்டில் ஏந்தியபடி அவன் அம்மா வரவே.. மேற்கொண்டு எங்கள் பேச்சு தடைப் பட்டது.
சாப்பிட்டு முடித்து மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். எனக்கென்னமோ அவனது அம்மாவைப் பார்க்க பார்க்க என் சொந்த அம்மாவைப் பார்ப்பது போன்ற பிரமை ஏற்பட்டது.
ரொம்ப உரிமையோடு மூவரும் பேசிக்கொண்டிருந்தோம்.
நேரம் சென்றது. காலேஜ் விடும் நேரம் ஆகிக்கொண்டிருந்தது. நான் வேறு ஹாஸ்டலுக்கு செல்லவேண்டுமே.
அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு திரும்பினேன்.
பஸ் நிறுத்தம் வரை சாமிநாதனும் வந்தான்.
அங்கு நின்று பேசிக்கொண்டு இருந்தோம். கூட்டாம் அதிகம் இல்லை. இருந்த இரண்டொருவரும் அவர்களது பஸ் வந்துவிடவே ஏறிச்சென்று விட்டனர்.
நிழற்குடைக்குள் நாங்கள் இருவர் மட்டுமே நின்று நின்று கொண்டிருந்தோம்.
என்னை நெருங்கி
தோள்மீது கை போட்டு அணைத்த மாதிரி நின்று கொண்டிருந்தான் சாமிநாதன். அவனது
அணைப்பு எனக்கு வேண்டி இருந்தது. பிடித்தும் இருந்தது. ஆகவே நான்
தடுக்கவே இல்லை.
"ஆனாலும் உனக்கு
"தில் " அதிகம்டா." என்றேன் நான்.
"என்னடா இப்படி
சொல்லறே?" என்று கேட்டான் சாமிநாதன்.
"பின்னே என்ன?
வீட்டுலே ரூம் கதவை கூட சாத்திக்காம என்னை இழுத்து வச்சு முத்தம்
கொடுக்கறே. அம்மா வந்து இருந்தா ..? எனக்கு இப்போ நினைச்சாலும் படபடப்பா
இருக்கு தெரியுமா?' என்றேன் நான்.
கலகலப்பாக
சிரித்தான் சாமிநாதன்.
"நான் யாருக்குடா
கொடுத்தேன். என் ரமணிக்கு தானே கொடுத்தேன். அதான் யாரும் பாக்கலே
இல்லே.? அதான் அய்யாவோட டாலேன்ட்." என்று பெருமிதத்தோடு சொன்னான் அவன்.
"நல்ல டாலேன்ட்
தான். இந்த டாலன்ட்டை படிப்பில காட்டினா nallaa இருக்குமே. " என்றேன்
நான்.
நான் ஏற வேண்டிய
பஸ் வந்தது. ஆனால் ஏற விடவில்லை அவன்.
"அடுத்த பஸ்லே
போடா. " என்று சொல்லி சொல்லியே மூன்று நான்கு பஸ்களை தவறவிட்டு அந்த
நிழற்குடைக்குள் என்னை அணைத்து முகத்தோடு முகம் வைத்து நெருக்கமாக நின்று
பேசிக்கொண்டிருந்தான் அவன்.
"யாராவது போறவங்க
வரவங்க பார்த்தால் என்னடா நினைப்பாங்க". அழாத குறையாக நான் கேட்டாலும்
மனம் அந்த நெருக்கத்தை விரும்பியது.
ஒருவழியாக
ஐந்தாவது பஸ்ஸில் ஏறி அமிர்தாஞ்சன் நிறுத்தத்தில் இறங்கி கல்லூரி ஹாஸ்டலை
நான் அடைந்தபோது மணி ஐந்தரை ஆகிவிட்டிருந்தது.
ரூமுக்குள்
நுழைந்தேன் நான்.
"சாருக்கு கிளாஸ்
இப்போ தான் முடிஞ்சதா? எங்கே போய் சுத்திட்டு வரே.?" ராபர்ட்டின் குரலில்
கேலியும் குத்தலும் தெறித்தது.
என்ன பதில்
சொல்வது என்று புரியாமல் ஒரு கணம் தடுமாறி நின்றேன் நான்.
(முரட்டுத்தனம் தொடரும்...)
No comments:
Post a Comment