Saturday, September 27, 2014

கொடை கொண்ட மதயானை உயிர் கொண்டு நடந்தான்.
குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன். - கவிஞர் கண்ணதாசன்

ஒரு கணம் இருவரும் திகைத்து நின்றோம்.

"என்னடா இது.. வீடு பூட்டி இருக்கு. அம்மா எங்கே போயிருப்பாங்க?" என்றேன் நான்.


ஒரு கணம் திகைத்த சாமிநாதன் மறுகணம் நினைவுக்கு வந்தவனாக," இன்னிக்கு
வெள்ளிக்கிழமை இல்லையா?  அம்மா மாங்காடு கோவிலுக்கு போயிருப்பாங்க.  மதியம் ரெண்டு மணிக்கு தான் வருவாங்க." என்றான்.


"இப்போ என்னடா செய்யறது?"  என்று கேட்டேன் நான்.

"இருடா.  ஹவுஸ் ஓனர் வீட்டுலே சாவிய கொடுத்துட்டு போயிருக்காங்களான்னு கேட்டுட்டு வந்துடுறேன்."என்றவனாக முன்பக்கம் இருந்த ஹவுஸ் ஓனரின் வீட்டை நோக்கிச் சென்றான் சாமிநாதன்.


இரண்டு நிமிடத்தில் திரும்பியவன் கைகளில் வீட்டுச் சாவி இருந்தது.

கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் அவன்.  பின்தொடர்ந்து நானும் நுழைந்ததும் கதவைச் சார்த்தி தாழிட்டான் சாமிநாதன்.

 ஹாலை அடுத்து இருந்த படுக்கை அறைக்குள் இருவரும் நுழைந்தோம்.


ஷர்ட், பனியன், பாண்ட் என்று ஒவ்வொன்றாகக் களைந்து வேட்டிக்கு மாறினான் சாமிநாதன்.
படுக்கையில் அமர்ந்துகொண்டான்.

"ஓகே..சாமா.
டேக் ரெஸ்ட்.  நான் கிளம்பறேன். நாளைக்கு சாட்டர்டே. காலேஜ் லீவு.  அதனாலே
ரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு மண்டே வாடா. " என்று கிளம்பத்
தயாரான என் கையைப் பற்றி இழுத்து,"அதுக்குள்ளே என்னடா அவசரம்?  அம்மா
வந்தப்புறம் போடா." என்று படுக்கையில் தன அருகில் இழுத்துக்கொண்ட சாமிநாதன்
என்னை இறுக்கமாக அணைத்துக்கொண்டு படுக்கையில் படுக்க வைத்து தானும்
அருகில் படுத்துக்கொண்டவன் என் உதட்டோடு அவனது உதட்டை வைத்து
அழுத்திக்கொண்டான்.

பொதுவாக  சாமிநாதனைப் பார்ப்பவர்கள் யாருமே அவனுக்கு
இப்படி உடலில் குறைபாடு இருப்பதை - (அதை குறைபாடு என்று சொல்லமுடியாது - 
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு  மாதிரியான அவஸ்தை  -  அவனுக்கு வலிப்பு நோய்,
ஆஸ்த்மா ஆகியவை) கண்டுபிடிக்கவே முடியாது.  அவ்வளவு கச்சிதமாக உடம்பை அவன்
வைத்திருந்தான்.  என்னை விட இரண்டு இன்ச் உயரம் அதிகம்.. ஆனால் அந்த
உயுரத்துக்கேற்ற உடல்கட்டு. 
ஆகவே அந்த கட்டுடலுடன் அவன் என்னை இறுக்கி அணைத்து இதழோடு இதழ் சேர்த்தபோது என்னால் அவனை விலக்க முடியவில்லை.

திறந்த
மார்புடன் அவன் என்னை அணைத்தபோது அவன் அணைப்புக்குள் இருந்த நான்,
"ப்ளீஸ்.. சாமா.. என்ன இது.. ?  ப்ளீஸ்டா." என்று முணுமுணுத்தேன்.

"பயப்படாதே..
நான் உன்னை வேற ஒண்ணுமே பண்ண மாட்டேன்.  எனக்கு நீ வேணும்டா.  ஜஸ்ட்
இப்படி உன்னை அணைச்சுக்கிட்டு படுத்து இருந்தா அதுவே எனக்கு போதும்டா. 
ரமணி.. ப்ளீஸ்.  அண்டர்ஸ்டாண்ட்  மீ." என்று கிசுகிசுப்பாக கனிவு பொங்கும்
குரலில் அவன் பேசிய போது..  என்னால் அவனைத் தடுக்கவே முடியவில்லை.

என் கைகள் தானாகவே அவன் முதுகில் பரவி அவனை அணைத்துக்கொண்டன.

என்
வாய்க்குள் அவன் நாக்கு ஊடுருவி பக்கவாட்டு சுவரைத் தடவிகொண்டிருந்த
நேரத்தில் அவனது உதடுகள் என் உதட்டை கவ்விச் சுவைத்துக்கொண்டிருந்தன.

கைகள்
என்னை வளைத்து அனைத்துக்கொன்டிருந்தன.  மெல்ல மெல்ல அவனது வலது கை
முன்புறம் ஊர்ந்து என் சட்டையின் பட்டன்களை விடுவித்து என் மார்பில் பதிந்த
போது..  அப்படியே என்னை படுக்கையில் கிடத்தி என் மீது அவன் பரவி என்
மார்பை பற்றி வருடி, தடவி, கசக்கி, பிதுக்கி - சட்டென்று என் உதட்டின்
மீதிருந்த வாயை கீழே இறக்கி என் முலைக்காம்பில் முத்தமிட்டு நாவால் வருடி..
இன்பச் சிலிர்ப்பை ஊட்டியவன்..  அப்படியே என் தோள்பட்டையை கவ்வி ..  என்னை
அணைத்தபடியே வெகு நேரம் தன்னை மறந்து இருந்தான்...

"ரமணி.. நீ.. என்
ரமணிடா.  எனக்கே எனக்கு நீ வேணும்டா.  நீ மட்டும் என் கூடவே இருந்துட்டா
என் வாழ்க்கைக்கே புது அர்த்தம் கிடைச்சுடும்டா. "- என்று சொல்லிக்கொண்டே
முத்தமழை பொழிந்து என்னைத் திணற அடித்தான் சாமிநாதன்.

நான் திணறித்தான் போனேன்.

என்ன இது.  ?  இப்படி என் மீது அன்பு வைத்து என்னை அன்பால் இப்படி ஆக்கிரமிக்கிறானே இவன். ?
எப்படி என் மீது மட்டும் இப்படி ஒரு எண்ணம் இவனுக்கு வந்தது?
.
யோசிக்க யோசிக்க எனக்கு விடை தெரியாமல் திணறினேன்.

"சாமா.. ஒண்ணு கேப்பேன்.  தப்பா நெனைச்சுக்க மாட்டியே?" என்றேன் நான்.

"கேளுடா..கேளு..என்ன வேணுமோ கேளு. " என்றான் என் கன்னத்தோடு தன கன்னத்தை வைத்து இழைத்தபடி.

"நம்ம க்ளாஸ்லே 48 பேரு இருக்காங்க.  அவங்க எல்லாரையும் விட்டுட்டு என்னை
மட்டும் புள்ளி குத்தின மாதிரி செலெக்ட் பண்ணி உன் வாழ்க்கை கூடவே வர
முடியுமான்னு கேக்கறியே.  அந்த அளவுக்கு என்கிட்டே என்னடா இருக்கு..?"-
என்று கேட்டேன் நான்.

"ப்ச்.  சொல்லத் தெரியலேடா.  பட் ஆனாக்க உன்னை பாக்க பாக்க நீ எனக்கே எனக்கு வேணும்னு மட்டும் தோணுதுடா. -  நீ வேணா ஹாஸ்டலை காலிபண்ணிட்டு என் கூடவே வந்துடேன்..  என் வீட்டுலேயே இருந்துடேன் என்று கேக்க கூட தோணுதுடா.  ஆனால் அதுக்கு  நிலைமை சரியில்லே.  என் மாமாவுக்கு என் மேல உயிர்டா.  ஆனா மாமிக்கு நானும் எங்க அம்மாவும் பாரமா வந்து இருக்கோம்னு எண்ணம்.  தினமும் எவ்வளவோ குத்திக்காட்டுவாங்க.  அதனாலே என் மனசை அடக்கிட்டு இருக்கேன்.  நான் மட்டும் படிப்பை முடிச்சுட்டா வேலைக்கு போய்டுவேன்.  அப்புறம் நானும் அம்மாவும் மட்டும் தான். அப்போ அவங்க கிட்டே சொல்லி அவங்க சம்மதத்தை வாங்கிட்டு உன்னை என் கூடவே வாழ்நாள் முழுக்க வச்சுக்கிட்டு  சந்தோஷமா இருப்பேன்.  எப்படிடா என் ஐடியா.  அப்படி
ஒரு நாள் வந்தா நீ என்கூடவே இருப்பியாடா.  ப்ளீஸ்.  இருப்பேன்னு சொல்லுடா
ரமணி. " என்று கேட்டபோது உணர்ச்சிப்பெருக்கால் சாமிநாதனின் குரல்
கரகரத்தது.

என்ன சொல்வது என்றே தெரியாமல் விக்கித்துப் போயிருந்தேன் நான்.

(முரட்டுத்தனம் தொடரும்...)

No comments:

Post a Comment