Saturday, September 13, 2014

முரட்டு சிங்கத்துடன் மூன்று வருடங்கள் - 23

23.  உலகத்தின் ரகசியம் அறிந்தவனாம்  உள்ளத்தின் கதைகள் தெரிந்தவனாம்
பழகும் விதமும் புரிந்தவனாம் பார்க்கும் பார்வையில் தெளிந்தவனாம்  -  கவிஞர் கண்ணதாசன்.

ஒரு நிமிடம் தான் இந்த சஞ்சலம்.  அதன் பிறகு நான் நிதானத்துக்கு வந்தேன்.

என்ன இது?  என்ன ஆயிற்று எனக்கு?  ஏன் இந்தக் குழப்பம்?
தேவையற்ற எண்ணங்கள்?

சட்டென்று தறிகெட்டு ஓடிய மனக்குதிரையை லகான் போட்டு அடக்கினேன்.

பிரகாஷும் ராபர்ட்டும் இன்று நேற்றா பழகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கெனவே இருவரும் நண்பர்கள் தான்.  அதுவும் இணைபிரியாத நண்பர்கள்.  அவர்களுக்குள் அன்பும் பாசமும் அதிகரித்து அது அவர்களுடைய உடல் நெருக்கத்தில் கொண்டு போய் விட்டாலும் அதில் தப்பேதும் இல்லையே.

ராபர்ட்டோ ஆண் உறவில் அதிக நாட்டம் கொண்டவன்.  ஆகவே அவனுடைய வேட்கைக்கு ஒரே அறையில் இருக்கும் என்னை பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.  அதில் தவறேதும் இல்லையே. எனக்கும் அது பிடித்துத் தானே இருந்தது?.  அதனால் அவனுடைய காமப்பசிக்கு என்னை பயன்படுத்திக்கொள்வதாக நான் எப்படி நினைக்க முடியும்?

பிரகாஷ் - முதலில் என்னை பழி தீர்க்க வரவழைத்தவன் அப்புறம் என்னிடம் மனத்தால் ஒன்ற ஆரம்பித்திருக்கிறான்.  ஆகவே அதுவும் தப்பு இல்லை.

இதோ இந்த கணேசன் -  எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக என்னிடம் தன் உடலைப் பகிர்ந்து கொண்டிருக்கிறான்.  அவன் மனதில் என் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்தால்  - நான் தப்பாக நினைத்துக்கொள்வேனோ என்ற தயக்கம் இல்லாமல் என்னிடம் இப்படி நடந்து கொண்டிருக்கிறான்.

அது மட்டும் இல்லை..  என்னவோ அவரவர்கள் வேலை மெனக்கெட்டு என்னை அனுபவிக்க வருகிறார்களே என்று கழிவிரக்கப் படுகிறேனே.
எனக்கு மட்டும் அந்த எண்ணம் இல்லையா என்ன.?

பிரகாஷை முதலில் கல்லூரி வாசலில் சட்டையை கழட்டிய நிலையில் பார்த்தபோது..  "இந்த உடம்பு மட்டும் என்னை கட்டி பிடிச்சா எப்படி இருக்கும்." என்று கற்பனை செய்து பார்க்கவில்லையா?.

அறையில் ராபர்ட்டின் திறந்த மார்பை பார்த்ததும் படிக்க முடியாமல் ஏன் அவஸ்தைப் படவேண்டும்.


இதோ இப்போது கூட இந்த கணேசன் கட் பனியனோடு உட்கார்ந்தபோது நான் பார்த்து ஆசைப் படவில்லையா.

இதற்கு முன்னால் பள்ளி நண்பன் ரமேஷோடு படுத்து புரண்ட போதெல்லாம் இந்த நினைப்பு எனக்கு வந்ததா?

ஆகவே வேண்டாத எண்ணங்களை மனசில் ஓடவிட்டு குழப்பிக் கொள்ளள வேண்டாம்.  இப்படி மனசை தெளிய வைத்துக்கொண்டாலும் ஒன்றை மட்டும் அது ஏற்க மறுத்தது

அதுதான் -  பிரகாஷும் ராபர்ட்டும் இப்போது ஒருவர் அணைப்பில் ஒருவர் சுகம் கண்டுகொண்டிருப்பார்களே என்ற கற்பனையை மட்டும் அது ஏற்க மறுத்தது.

பிரகாஷின் ஆண்மை நிறைந்த அணைப்பு எனக்கு மட்டுமே சொந்தம்.- அதை வேறு ஒருவர் -அது ராபர்ட்டாகவே  இருந்தாலும் கூட -   அடைவதை மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது.

அதை மறக்க கணேசனின் பிடிக்குள் இன்னும் தீவிரமாக என்னை ஒடுக்கிக்கொண்டேன் நான்.

**********

பொழுது விடிந்தது.

இருவரும் எழுந்து எதுவுமே நடக்காத படி இயல்பாக இருக்க ஆரம்பித்தோம்.

வண்டி  திருச்சியை தாண்டியதும் கணேசன் என் அருகில் வந்தபடி, "நேத்து நைட் நான் நடந்துகிட்டது..."என்று ஆரம்பித்ததும்

"நோ கணா.  அதைபத்தி என்ன இப்போ..  ரிலாக்ஸ்டா இரு." என்று சொல்லிவிட்டு சகஜ நிலைக்கு வந்தேன்.

என்றாலும் மனசில் ஏதோ ஒரு மூலையில் பிரகாஷ் ராபர்ட்டோடு உறவு அனுபவித்திருப்பானோ என்ற எண்ணம் மட்டும் வந்துகொண்டே இருந்தது.
****       ******

"ஹேய்.. ரமணி வந்துட்டான் பாரு."  அப்பாவின் உற்சாக வரவேற்பும், அம்மாவின் முகத்தில் தெரிந்த சந்தோஷமும், தம்பியின் பாசமான துடிப்பும் என் மனதில் இருந்த உறுத்தலை மறக்க செய்தன.

வழக்கமான விசாரிப்புகள் எல்லாம் முடிந்த பிறகு அப்பா, "ஹொவ் இஸ் மிஸ்டர் ராபர்ட்.?" என்று அக்கறையாக விசாரித்தார்.

"என்னப்பா இது அவருக்கு போய் மிஸ்டர் கிஸ்ட்டர் எல்லாம் போட்டுண்டு. அவன் உன்னை விட ரொம்ப சின்னவன்." என்றேன் நான்.

"அப்படி இல்லேடா..  ரியலி ஹீ இஸ் எ டீசெண்ட் ஜென்டில்மேன். அதனாலே மரியாதை கொடுத்தா தப்பு இல்லே. " என்றார் அவர்.

"டீசெண்ட் ஜென்டில்மேனா .  யாரு அவனா.  அவன் கிட்டே நான் படுற அவஸ்தை இவருக்கு தெரியுமா.  தெரிஞ்சா இப்படி சொல்லுவாரா" என்று நினைத்துக்கொண்டாலும் மனசுக்குள் ராபர்ட்டை பற்றிய அவரது மதிப்பீடு ரொம்ப பெருமையாக இருந்தது.

நான்கு நாட்கள் என்பது நீண்டு ஒரு வாரமாகி கணேசன் சொன்னது போல விடுமுறை எக்ஸ்டென்ட் ஆனது.

ஒரு வழியாக அடுத்த ஞாயிறு அன்று HOSTEL  அறைக்கு வந்து சேர்ந்தேன்.

"வாடி.. வா. என்ன ஒரேயடியா இப்படி லீவ் போட்டுட்டே.  மாமனை இப்படி பட்டினி போட்ட உன்னை..  " என்று சொல்லியபடி நான் அறைக்குள் நுழைந்ததும் வெறித்தனமாக என்னை இழுத்து முத்தம் இட்டான் ராபர்ட்.

(முரட்டுத்தனம் தொடரும்...)

No comments:

Post a Comment