Saturday, September 27, 2014

இளம் பருவத்தான் நல்ல உருவத்தான்
நானும் விரும்பத்தான் ஈசன் தருவித்தான் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

நடந்துகொண்டிருந்த சாமிநாதன் சட்டென்று நின்றான்.  பக்கவாட்டில் முகத்தை திருப்பி என் முகத்தை நோக்கினான்.

"என்னடா  அப்படி பாக்கறே.?" என்றேன் நான்

:இப்போ என்ன சொன்னே?" என்று கேட்டான் அவன்.



"என்னடா தப்பா சொல்லிட்டேன்.  அவங்க சொன்னது மாதிரி நாம் இருக்கோம்.  அது
நமக்கு சந்தோஷத்தை தருதுன்னு சொன்னேன்.  இஸ் தேர் எனிதிங் ராங்?" என்றேன்
நான்.


"சிவராவ் சொன்னது உனக்கு வேதனையா இருக்கும்னு நினைச்சேன் நான்" என்றான் சாமிநாதன்.



"அப்படீன்னா..  எனக்கு வேதனையா இருக்குமுன்னு நீ நினைச்சியா.  தென் உனக்கு ஹாப்பியா இருக்கா.?" என்று கேட்டேன் நான்.


பதில் சொல்லாமல் மௌனித்தான் சாமிநாதன்.

"இதோ
பாரு சாமா.  அவங்க எந்த அர்த்தத்துலே வேணுமாலும் சொல்லி இருக்கலாம்.  பட்
நாம ஏன் அதை தவறான அர்த்தத்துலே எடுத்துக்கணும்.  அவ்வளவு நெருக்கமான
நண்பர்களா நாம் இருக்கிறோம்.  நம்ம நட்புக்கு மத்தவங்க கொடுத்த அங்கீகாரமா
இதை ஏன் எடுத்துக்க கூடாது. ? " = என்றேன் நான்.




சாமா பதில் பேசவில்லை.  ஒரு கணம் மௌனம் சாதித்தவன்.. "ரமணி.  உன்கிட்டே
மனசு விட்டு சில விஷயம் பேசணும்.  தப்பா எடுத்துக்க மாட்டியே?" என்றான் .


"ஹேய்.. என்னடா இது.  உன்னை நான் தப்பா நெனைச்சா அது என்னையே நான் தப்பா நேனைச்சுக்குற மாதிரி.: என்றேன் நான்.



"ரமணி..  நீ சொல்லற மாதிரி நம்ம க்ளாஸ்லே நம்மைப் பத்தி அப்படி நெனைக்கறது நம்ம பிரெண்ட்ஷிப்புக்கு கிடைச்ச ஒரு ரெகக்னிஷன் தான்.
   பட்
ஆனா எனக்கு என்னவோ நீ எனக்காகவே பொறந்து இருக்கற மாதிரி தோணுதுடா.  என்
கூடவே நீ  என் வாழ்க்கை முழுக்க கூட வரணும்னு தோணுதுடா. "- சாமிநாதனின்
குரலில் கனிவு இருந்தது.  காதல் தெரிந்தது.




அவனோடு கோர்த்து இருந்த என் கைகளை பற்றி அழுத்தினான் சாமிநாதன்.


அந்த ஸ்பரிசம், அந்தக் குரல்..  என்னை என்னவோ செய்தது.

"சாமா..
எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலே.  எனக்கும் கூட சமயத்துலே நாம ரெண்டு
பேறும் இருபத்து நாலு மணி நேரமும் ஒண்ணா இருக்கணும் என்று தோணும்.  
இன்னும் சொல்லப்போனா நம்ம ரெண்டுபேரையும் ஆண்களா படிச்ச கடவுள் மேல கோவம்
கூட வரும்.   என்னை உனக்காக ஒரு பொண்ணா படிச்சு இருக்கக் கூடாதா என்று கூட
தோணும்.
   எல்லாம் சரி.  நீ என்னவோ சொல்லறியே இதெல்லாம் நடக்குமாடா.? 
சாத்தியப்படாத ஒண்ணுக்காக நீயோ நானோ மனசுலே ஆசையை வளர்த்துக்கிட்டு
பின்னாடி அவசியத்தை படனுமா என்ன?  அதைவிட எதிர்காலத்தை அதோட போக்கிலே
விட்டுவிட்டு இப்போ நிகழ் காலத்துலே சந்தோஷமா - ஒன்றிப்போன உண்மையான
நண்பர்களா வாழ்ந்துட்டு போவோமே.?" என்றேன் நான். 


அதற்குள் பேருந்து நிறுத்தம் வந்துவிட்டது. 12-B பஸ்சும் வந்து நின்றது.  இருவரும் ஏறிக்கொண்டோம்.

பீக் ஹவர் முடிந்துவிட்டிருந்ததால் கூட்டம் அதிகம் இல்லை.

இருவரும் பேருந்தில் ஏறி காலியாக இருந்த இரட்டை இருக்கைகளில் ஒன்றில் அருகருகே அமர்ந்துகொண்டோம்.

நடத்துனரிடம் பயணச்சீட்டை வாங்கிக்கொண்ட பிறகு பேச்சை தொடர்ந்தான் சாமிநாதன்.


"ஏன் சாத்தியப்படாதுன்னு நெனைக்கிறேடா?  எங்க வீட்டைப் பொருத்தவரை எங்க
அம்மாவுக்கு என் விருப்பம் தான் முக்கியம்.  அவங்க வாழறதே எனக்காகத்தான். 
கொஞ்சம் நெனைச்சுப்பாரு ரமணி.
  நான் ஒரு எபிலெப்டிக்.  அதோட ஆஸ்துமா பேஷன்ட்டும் கூட.    எனக்கு கல்யாண வாழ்க்கை எல்லாம் வெறும் கனவுதான்.  எந்தப்பொண்ணுடா என்னை கட்டிக்க வருவா?. உடல் சுகம் வேணும் என்றால் நான் வேசிகிட்டே தான் போகணும்.  அதுக்கு எனக்கு இஷ்டம் இல்லே.  ஏற்கெனவே இப்படி இருக்குற ஒடம்ப இன்னும் கெடுத்துக்க நான் தயாரா இல்லே.  அப்படி இருக்குறப்போ உன் கூட இருக்குறது எனக்கு சந்தோசம் கொடுக்குது.  உன்னை அப்படியே அள்ளி அணைச்சுக்கிட்டே காலம் முழுக்க இருந்துடலாம் போல தோணுது. நான் நெனைக்கறது தப்பா இருந்தா என்னை மன்னிச்சுடு.  பட் எனக்கு நீ வேணும்டா.  என் வாழ்நாள் முழுக்க நீ என் கூட வேணும்டா. " என்ற படியே என் கைகளுக்குள் தன் கைகளைக் கோர்த்துக்கொண்டு அதை அப்படியே தன் தொடை மீது வைத்துக்கொண்டான் சாமிநாதன்.

அவன் உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தான்..  அவனது கரம் நடுங்கியது.



"சாமா.. ப்ளீஸ்.  ரிலாக்ஸ்டா.  டென்ஷன் ஆகாதே..  மறுபடி உடம்புக்கு
வந்துடப்போகுது. " என்று அவன் தோள்மீது தலை சாய்த்தபடியே அவனை தேற்றினேன்
நான்.


பஸ் ஆழ்வார்பேட்டை சிக்னலைத் தாண்டி ஆலயம்மன் கோவில் நிறுத்தத்தில் மூச்சு வாங்கிக்கொண்டு பனகல் பார்க்கை நோக்கி பாய ஆரம்பித்தது.

"ரமணி..  நான் ரொம்ப சுயநலக்காரன் இல்லையாடா?" திடீரென்று இப்படிக் கேட்டான் சாமிநாதன்.

"ஏண்டா இப்படி சொல்லுறே? அப்படி எல்லாம் ஒண்ணும்  இல்லே.  அப்படியே
உனக்கு சுயநலம் இருந்தா அதுகூட தப்பே இல்லேடா.  யார் தான் தன் நலத்தை
நினைக்காம இருக்காங்க?.  தனக்கு எது சந்தோஷத்தை தருதோ அதை செய்ய
நெனைக்காதவங்க யாருடா இருக்காங்க".  ஆனால் அந்த சந்தோஷத்துக்காக அவங்க
செய்யுற செய்கை அடுத்தவங்க வாழ்க்கையை பாதிக்காம இருக்கணும்.  அதுதான்
முக்கியம் சாமா." என்றேன் நான் அவனுக்கு ஆதரவான குரலில்.


"எனக்கு உன்னை நெனைச்சா ரொம்ப ஆச்சரியமா இருக்குடா.!" என்றான் சாமிநாதன்.

"ஏண்டா?" என்றேன் நான்.

"பின்னே என்னடா.  பாக்க ரொம்ப பொடிசா இருக்கே.  அதுவும் இப்போ இருக்கறது
அடொலெசெண்ட்  ஏஜ். இந்த வயசுலே எப்படிடா இவ்வளவு மெச்சூரிடியொட பேசறே. ?' -
என்று கேட்டான் சாமிநாதன்.


அதுவா..  நான் நெறைய புக்ஸ் படிப்பேண்டா.   ஆனந்த விகடன்லே வர தொடர்
எல்லாம் விடாம படிப்பேண்டா.  அதுல் வர கதாபாத்திரங்கள் பேசிக்கற
கான்வேர்செஷன் .எல்லாத்தையும் திரும்பி திரும்பி படிச்சு மனசுக்குள்ளே
வாங்கிக்குவேன்.  அதாண்டா.  " என்றேன் நான் பெருமிதத்துடன்.


பஸ் இப்போது உஸ்மான் ரோடில் திரும்பி நேராகச் சென்று கோடம்பாக்கம் மேம்பாலத்துக்கு முந்தைய நிறுத்தத்தில் நின்றது.

இருவரும் இறங்கி சாலையை க்ராஸ் செய்து மகாலிங்கபுரம் மாதவன் நாயர் ரோட்டில் நடந்து ஐயப்பன் கோவிலைக் கடந்து சாமிநாதனின் வீடு இருந்த சாலையில் திரும்பி வீட்டை அடைந்தோம்.

வீடு பூட்டி இருந்தது.

(முரட்டுத்தனம் தொடரும்..)    

No comments:

Post a Comment