Saturday, September 27, 2014

"என்னுரிமை என்றே நானிருக்கும் போது 
தென்றல் வந்து உன்னை தீண்டியது என்ன"  -  கவிஞர் கண்ணதாசன்.

அந்த இரவு என்னால் மறக்கமுடியாத இரவாக அமைந்துவிட்டது.
ராபர்ட் என்ற கல்லுக்குள் இருந்த காதலை இளக வைத்து விட்ட மகிழ்ச்சியில் அவனோடு மனம் விட்டு ஒன்றிப்போனேன் நான்.

நிறைவான மனதோடு - நட்போடு - காதலோடு - ஈருடல் ஓருயிராகக் கலப்பதில் ஏற்படும் சுகம் வார்த்தைகளில் அடங்காதது.

அந்த சுகம் கிடைத்த நிறைவில் நான் அவன் உடலோடு அப்படியே ஒட்டிக்கொண்டேன்.
கம்பீரமான அந்த ஆண்மகன் என்னை அன்று சிலிர்க்கவைத்தான், உருகவைத்தான்.
நேரம் போனதே தெரியவில்லை.  இருவரும் எப்போது ஓய்ந்தோம், எப்போது உறங்கினோம்..  அது எங்களுக்கே தெரியவில்லை.

****
பொழுது விடிந்தது.   எதுவுமே நடக்காதது போல எழுந்து தன் நாளைத் துவங்கினான் ராபர்ட்.   
குளித்து முடித்து கல்லூரிக்கு புறப்படும் தருணம்.  

"ஹேய்.. இன்னிக்கு என்ன நாள்?  ஞாபகம் இருக்கு இல்லே?"  என்றான் பாண்ட்டை அணிந்துகொண்டே ராபர்ட்.

ஒரு கணம் விழித்த நான் மறுகணம் அவன் சொன்னதை புரிந்து கொண்டேன்.
அன்று கல்லூரி மாணவர் தலைவர் தேர்தல் நடக்க இருக்கிறது.

இரு அணிகளாக போட்டி இடுகின்றனர்.   "A" அணியில் வெங்கடேஷ் தலைமையிலும், "B" அணியில் செல்வம் தலைமையிலும் களம் இறங்குகின்றனர்.

வெங்கடேஷ் அணியில் பொருளாளர் தேர்வுக்கு பிரகாஷ் களம் இறங்குகிறான்.  (ஆம்.. எங்கள் பிரகாஷேதான்.). ஆகவே ராபர்ட் எந்த அணியை ஆதரிப்பான் என்று சொல்லவா வேண்டும்.

அன்று எங்களுக்கு வாக்கு பதிவு நாள்.  அதைத்தான் நினைவுபடுத்தினான் ராபர்ட்.

"நல்லா நினவு இருக்கு ராபர்ட்.  நம்ம ஓட்டு கண்டிப்பா "ஏ" க்ரூப்புக்குத்தான். " என்று சொல்லிவிட்டு கிளம்பினேன் நான்  நடக்க இருக்கும் விபரீதம் புரியாமல்.

கல்லூரி களை கட்டி இருந்தது.  மாணவர்கள் கடைசி நேர ஆதரவை அவர்கள் சார்ந்த குழுவுக்காக திரட்டிக்கொண்டிருந்தனர்.

அன்பாகவும், நயமாகவும், சிலபேரிடம் அதிகாரத்தொனியிலும், சிலரிடம் மிரட்டலாகவும் ஆதரவை திரட்டிக்கொண்டிருந்தனர்.

எங்களது ஹிஸ்டரி ப்ளாக்கினுள் நுழைந்து வகுப்பை அடைந்தேன் நான்.

என் இருக்கையில் அமர்ந்தேன் நான்.  என் அருகில் வலப்பக்கம் வந்து அமர்ந்து கொண்டான் சாமிநாதன்.  இடதுபுறம் கணேசன்.

பேச்சை ஆரம்பித்தான் சாமிநாதன்.

"ரமணி. நேத்து நீ வீட்டுக்கு வந்துட்டு போனாலும் போனே.  எங்க மதர் உன்னைப் பத்தியே தான் பேசிட்டு இருந்தாங்கடா.  நான் ரொம்ப லக்கியாம்.   உன்னை மாதிரி ஒரு நல்ல
சிநேகிதம் கிடைக்க கொடுத்து வச்சு இருக்கணுமாம்.  அப்படி என்னடா அவங்க
கிட்டே பேசினே. ?" என்றான் அவன்.


இதை கேட்டுவிட்டான் கணேசன்.

"என்னது.  நேத்து உங்க வீட்டுக்கு வந்தானா?  என் கிட்டே சொல்லவே இல்லையே?" என்றான் அவன்.

"எப்படிடா சொல்லறது?  நீயோ லீவு.  கிளாஸ் கட் அடிச்சுட்டு மதியமே கிளம்பிட்டோம்.
அதுக்கப்புறம் இப்போதானே  மீட் பண்ணறோம். " என்றேன் நான்.


அப்போது உள்ளே நுழைந்தார்கள் சிவராவும், மூன்றாவது வருடம் படிக்கும் சம்பத்தும்.  

சிவராவ்.  -  

எங்கள் வகுப்பின் ஹீரோ.  நுனி நாக்கு ஆங்கிலம் - 
கட்டான உடல் - என்று 
அலட்சியமாக அலையும் அவன் வைத்தது தான் வகுப்பில் சட்டம்.

"பிரெண்ட்ஸ்.  உங்களுக்கு எல்லாம் ஒரு முக்கியமான விஷயம்.  நம்ம ஆர்ட்ஸ் க்ரூப் முழுக்க இந்த தேர்தலிலே நம்ம செல்வம் தலைமையில் இருக்கும் "B" க்ரூப்பைத்தான்
சப்போர்ட் பண்ணப்போறதா தீர்மானம் போட்டு இருக்கோம்.  அதனால் நம்ம எல்லார்
வோட்டுக்களையும் அப்படியே "B" க்ரூபுக்குத்தான் போடணும். அது ஒண்ணும்
கஷ்டமே இல்லே.  எல்லா பாலட் பேப்பெர்சும் எங்க கிட்டேதான் வரும்.  சோ எங்க
மேற்பார்வையில் தான் நீங்க எல்லாரும் ஒட்டுப்போடணும்.  நினைவு இருக்கட்டும்
சிந்தாம சிதறாம நம்ம எல்லார் ஓட்டுக்களும் செல்வம் அணிக்கே போகணும்."
என்று அழுத்தமாகப் பேசினான் சிவராவ்.


யாருக்கும் அவனை எதிர்த்துப் பேசத் துணிவு இல்லை.

மாறாக அவனை கைதட்டி ஆராவரம் செய்து அவன் முடிவை பெரும்பாலான மாணவர்கள் வரவேற்றதுதான் ஆச்சரியம்.

"நோ. இது அநியாயம்.  ஐ கான்ட் டாலரேட் திஸ்.  யு ஆர் இன்டெர்பியரிங் இன் அவர்
ரைட்ஸ்." என்று அழுத்தமாகக் குரல் கொடுத்தபடி எழுந்தான் சாமிநாதன்.


"ஓத்தா.  என்னடா மயிரு?  என்றபடியே அவனை நோக்கி ஆவேசமாக நெருங்கினான் சிவராவ்.

(முரட்டுத்தனம் தொடரும்..)

No comments:

Post a Comment