அப்போது நான் சென்னையில் படித்துக்கொண்டு இருந்தேன். எங்கள் வீட்டு மொட்டை மாடியில் காலை நேரத்தில் இந்தக்கோடி முதல் அந்தக்கோடி வரை நடந்து கொண்டே சத்தமாகப்படிப்பது என் வழக்கம்.
அன்றும் அப்படித்தான் படித்துக்கொண்டு இருந்தேன். தற்செயலாக எதிர் வீட்டு மாடியில் பார்வையை செலுத்தியபோது தான் அவனை கவனித்தேன்.
அந்த மாடியில் காலை நேரத்து சூரிய ஒளியில் முதலில் என் கண்களுக்கு பட்டது அவனுடைய முதுகு தான். அது ஒரு தனி வீடு என்பதாலோ என்னவோ அவன் ரொம்ப சுதந்திரமாக வெறும் ஜட்டியுடன் உடல் பயிற்சி செய்து கொண்டிருந்தான். சிவந்த முதுகு கடல் போல பரந்துகிடந்தது. ஒவ்வொரு முறை அவன் புஜங்களுக்கு பயிற்சி செய்யும் போதும் அந்த முதுகு ஏறி இறங்கி....
காலை கதிரவனின் ஒளியில் அந்த செக்கச்சிவந்த முதுகில் துளிர்த்து இருந்த வ்யர்வை துளிகள் முத்து முத்தாக பிரகாசித்து ஒரு வித மினுமினுப்பை கொடுத்தன.
படித்துக்கொண்டு இருந்த நான் அதை விட்டுவிட்டு அந்த வாலிபனின் முதுகையே பார்த்துக்கொண்டு நின்றேன்.
அவன் பெயர் மோகன். வங்கி ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறான். இன்னும் திருமணம் ஆகாதவன். வெளியில் வாசலில் போகும்போது எப்போதோ இரண்டொரு முறை இருவர் பார்வையும் சந்தித்துக்கொள்ளும் போது - வசீகரமான அவன் முகத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டுமே என்று எனக்கு தோன்றுவதுண்டு.
ஆனால் அவனை இப்போது இப்படி உடம்பில் வெறும் ஜட்டியுடன் பார்ப்பது இது தான் முதல் தடவை. என் குரல் சட்டென்று தடை பட்டதாலோ - இல்லை திரும்பிநின்று தேக பயிற்சியை தொடர வேண்டுமே என்பதாலோ என்னவோ - எதோ ஒரு காரணம் - அவன் இப்போது திரும்பினான் .
"வாவ். என்ன உடம்பு இது! இப்படிக்கூட ஒரு ஆண்மகனால் உடம்பை வைத்துக்கொள்ள முடியுமா?
என்னை மறந்து அவனுடைய உடம்பையே வெறித்துப்பார்த்துக்கொண்டு நின்றேன் நான்.
(தொடரும்..)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment