அன்று மாலை வழக்கம் போல மொட்டை மாடியில் படித்து கொண்டு இருந்தேன்.
ஆனால் அன்று மோகனை அங்கு பார்க்க முடியவில்லை. இருட்ட தொடங்கியது.
கிழே இறங்கி என் வீட்டுக்குள் நுழைந்த பொழுது உள்ளே பேச்சு குரல் கேட்டது.
"அங்கிள். காபி எல்லாம் ஒன்னும் வேண்டாம். ஜஸ்ட் உங்களை பார்க்க தான் வந்தேன்" - என் மோஹனின் குரல்.
"முதல் முறை வீட்டுக்கு வந்து இருக்கிறாய். இது கூட அருந்தாமல் போக கூடாது" - என்று அப்பா சொல்லி கொண்டு இருக்கும் போதே சமையல் அறையில் இருந்து சூடான காபி கோப்பையுடன் வந்தார் அம்மா.
அதை நான் வாங்கி மோகனிடம் நீட்டினேன்.
நன்றி சொல்லியபடியே அதை வாங்கி நாசூக்காக அருந்த ஆரம்பித்தான் மோகன்.
"இவன் தான் உங்க மகனா?" - என்று என்னை காட்டி அப்பாவிடம் கேட்டான் அவன்.
"ஆமாம். பள்ளி இறுதி வகுப்பில் படித்து கொண்டு இருக்கிறான்." - என்று அறிமுகம் செய்து வைத்தார் அப்பா.
"நல்ல பையன். தினமும் மொட்டை மாடியிலே காலையிலே பார்க்கிறேன்" - என்றான் மோகன்.
"ஆமாம். பரீட்சை வருதே. படிக்க வருவான்" - என்றார் அப்பா.
"எப்படி அங்கிள் படிக்கிறான். நன்றாக படிக்கிறானா?" என்று கேட்டான் அவன்.
எனக்குள் எரிச்சலாக வந்தது.
"இது என்ன கேள்வி? ஒரு பையனோட அப்பா கிட்டே இப்படி கேட்டால் அவர் உடனே புலம்ப ஆரம்பித்து விடுவாரே? அவசியம் தானா?''- நான் நினைத்த படியே என் அப்பா பேச ஆரம்பித்தார்.
"என்னமோ படிக்கிறான். இந்த கணக்குலே மட்டும் தான் கொஞ்சம் வீக்." என்றார் அவர்.
அடுத்த கணம் மோகன் கேட்ட கேள்வி என்னை உற்சாகத்தில் துள்ளி குதிக்க வைத்தது.
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நான் வேண்டுமானாலும் சொல்லி கொடுக்கட்டுமா?'
"சே சே. உனக்கேன் மோகன் வீண் சிரமம்?" - என்றார் அப்பா.
"ஒரு சிரமமும் இல்லே. எனக்கு தெரிந்ததை நான் சொல்லி கொடுக்க போகிறேன். அவ்வளவு தானே" என்றவன் அவர் பதிலுக்கு காத்து இருக்காமல் என்னை பார்த்து "நாளைக்கு நான் வங்கியில் இருந்து திரும்ப கொஞ்சம் நேரம் ஆகும். ஆகவே இரவு ஒரு எட்டு மணிக்கு எங்க வீட்டுக்கு வந்து விடு," - என்று சொல்லியபடியே கிளம்பி சென்றான் அவன்.
நான் பிரமித்து நின்றேன். மறு நாள் இரவு எட்டு மணி சீக்கிரம் வராதா என்று காத்து கொண்டு இருந்தேன்.
மறு நாள் இரவும் வந்தது. அன்று மோகன் எனக்கு கற்று தந்தது கணக்கு பாடம் மட்டும் அல்ல. காதல் பாடமும் தான்.
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment