கதவை தாழிட்ட மோகன் என்னை அழைத்துக்கொண்டு அவன் அறைக்குள் சென்றான்.
அந்த அறை வெகு நேர்த்தியாக பராமரிக்க பட்டு இருந்தது. ஒரு மூலையில் ஒரு டேபிள் இரண்டு நாற்காலிகளுடன் இருந்தது. சிறிய ஸெல்ப் மீது ஒழுங்காக அடுக்கி வைக்க பட்டு இருந்த புத்தகங்கள். விசாலமான ஒரு கட்டில். அதன் மீது பரப்ப பட்டு இருந்த பிங்க் நிற மெத்தை. படுக்கை விரிப்பு. இரண்டு தலையணைகள். அருகில் இருந்த டீபாய் மீது ஒரு டேப் ரிக்கார்டர் . அருகில் ஒரு ஸ்டீல் பீரோ. சற்று தளி ஒரு அட்டாச்ட் குளியல் அறை.
என்னை டேபிள் முன்னே இருந்த நாற்காலியில் அமரச் செய்து விட்டு என் அருகில் இன்னொரு நாற்காலியை இழுத்து போட்டு கொண்டு அமர்ந்து கொண்ட மோகன் என் கையில் இருந்த கணித புத்தகத்தை வாங்கி கொண்டு, "எந்த பகுதி சொல்லி தரனும்?" என்று கேட்டான். நான் குறித்த பாடப் பகுதியில் இருந்து ஒரு மாதிரி கணிதத்தை போட்டு காட்டி விளக்க ஆரம்பித்தான்.
என் மனம் கவர்ந்தவன் சொல்லி கொடுக்கும் பொழுது அதை சரியாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் நான் கூர்ந்து கவனித்து புரிந்து கொண்டேன். ஒரு கணக்கை போட்டு விளக்கிய பிறகு அதே மாதிரி இன்னொரு பயிற்சி கணக்கை என்னை போடச் சொன்னான் மோகன்.
அதை நான் சரியாக போட்டு விடவே, ' வெரி குட். ஒரு முறை சொல்லி கொடுத்தால் "குப்"புன்னு புரிந்து கொள்கிறாயே" என்று தட்டி கொடுத்து பாராட்டினான் மோகன்.
"நீங்க தெளிவா சொல்லி கொடுக்குறீங்க அண்ணா. அதனாலே சுலபமா போட்டு விட்டேன்" - என்றேன் நான்.
"அப்படியா. அப்போ நான் என்ன சொல்லி கொடுத்தாலும் நீ நல்லா புரிஞ்சுக்குவியா?" என்று கேட்டான் மோகன்.
"கண்டிப்பாக" என்றேன் நான்.
நாற்காலியை பின்னுக்கு தள்ளிவிட்டு எழுந்த வண்ணம், "அப்படீன்னா இப்போ ஒரு புது பாடம் கற்று கொடுக்கட்டுமா?" என்று கேட்டபடி என் தோள்பட்டையை அழுத்தினான் மோகன்.
சட் என்று தலை நிமிர்ந்து அவனை பார்த்தேன் நான்.
அவன் பார்வையில் தென்பட்டது .. காதலா? காமமா? விரகமா? தாபமா?
என் உடல் ஒரு முறை சிலிர்த்தது.
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment