Monday, December 22, 2008

எதிர் வீட்டில் ஒரு இரவு - 6

மறு நாள் இரவை எதிர் நோக்கி கொண்டு ஆவலோடு காத்துக் கொண்டு இருந்தேன் நான்.
அன்று இரவு எட்டு மணி ஆவதற்கு முன்னமே என் வீட்டுக்கு வந்து விட்டான் மோகன்.
"என்ன அங்கிள். எங்கே உங்க பையன்?" - என்று கேட்டபடியே நுழைந்தான் அவன்.
"இதோ . உங்க வீட்டுக்கு தான் கிளம்பிகிட்டு இருக்கான்." என்றார் அப்பா.
"அங்கிள். ஒரு சின்ன உதவி வேண்டும்" - என்றான் மோகன்.
"என்ன வேண்டும் மோகன்?" என்று கேட்டார் அப்பா.
"பெரிசா ஒன்றும் இல்லே. என் பெற்றோர்கள் இன்னிக்கு திருச்சிக்கு போயிருக்காங்க. உங்க சன் படிச்சுட்டு என் வீட்டுலேயே தங்கிகொள்ளட்டுமே." என்றான் மோகன்.
என்ன? நானா? இரவு முழுவதும் மோகனுடனா?- எனக்குள் ஏற்பட்ட பரபரப்பு அடங்க நேரமானது.
"நோ ப்ரோப்ளம். அதனாலே என்ன? உன் கூட இருந்தால் தான் நீயும் நெறைய கற்றுகொடுக்க முடியும். தாராளமா அவன் உங்க வீட்டுலேயே தங்கிகொள்ளட்டும்" என்றார் அப்பா.
"தேங்க்ஸ் அங்கிள்." என்றவன் என் பக்கம் திரும்பி " சீக்கிரம் சாப்பிட்டு விட்டே வந்துவிடு." என்று கிளம்பினான் மோகன்.
"நீங்களும் சாபிடுங்களேன் அண்ணா" - என்றேன்.
"நோ. நோ. நான் வரும் போதே உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு தான் வந்தேன்" என்று சொல்லிவிட்டு அவன் வீட்டுக்கு சென்று விட்டான் மோகன்.
பரபரப்பாக சாப்பிட்டு விட்டு கணித புத்தகத்தையும் நோட் புக் ஒன்றையும் எடுத்துக் கொண்டு எதிர் வீட்டுக்கு சென்று அழைப்பு மணியை அழுத்தினேன் நான்.
கதவு திறந்தது. இடுப்பில் வெறும் லுங்கி மட்டும் அணிந்த படி மைனர் செயின் கழுத்தில் மின்ன திறந்த மார்புடன் என்னை பார்த்து புன்னகைத்தபடி உள்ளே அழைத்தான் அவன்.
நான் நுழைந்ததும் கதவை தாழிட்டான் மோகன்.
(தொடரும்...)

No comments:

Post a Comment