நம்முடைய மனதுக்கு ஒரு தனி இயல்பு உண்டு. தன்னுடைய கண்களுக்கு வித்யாசமாக ஏதாவது தென்பட்டால் அது தனக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ .. ஒரு இரண்டு நிமிடங்களாவது அதில் தன்னுடைய கவனத்தை செலுத்தும்.
அதை நாம் தவறாக எடுத்துக்கொள்ள முடியாது. எப்படி இரவில் உறங்கும் போது திடீர் என்று மின் விளக்கை போட்டால் ஒரு கணம் திறக்கும் கண்கள் தானாகவே மூடிக்கொள்ளுமோ அது போன்ற ஒரு அணிச்சைசெயலான நிகழ்வாகவே அதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த விடுமுறை தினத்தில் என் வீட்டில் கதிர் "குமுதம்" இதழை கையில் எடுத்துப் புரட்டிய போதும் அது தான் நடந்தது. பக்கங்களை புரட்டி கொண்டே போனபோது நான் அடிக்கோடிட்டு வைத்த ரமேஷின் கடிதம் அவன் கண்களில் பட்டிருக்க வேண்டும்.
சாதாரணமாக இருந்தால் இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் நாம், "இது என்ன சார். பர்சனல் லெட்டர் இங்கே வச்சு இருக்கீங்க?' என்று எடுத்துக்கொடுத்து விடுவோம். அல்லது அதை தனியாக டீபாயின் மீது எடுத்து வைத்து விட்டு கையில் இருக்கும் புத்தகத்தை தொடர்ந்து படிப்போம்.
ஆனால் அதில் பளிச்சென்று சிவப்பு மையினால் அடிக்கோடிட்டு நம்முடைய கவனத்தை தனியாக கவரக்கூடியபடி எழுத்துக்கள் ஏதாவது தென்பட்டால் அதை படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இயல்பாக நமக்குள் எழும்பும். அது அடுத்தவருடைய கடிதம் ஆயிற்றே. அதை நாம் படிப்பது தவறே என்றெல்லாம் அப்போது தோன்றாது. அது ஒரு தற்செயலான நிகழ்வு. அதனை நாம் அநாகரீகமாக கருதவும் கூடாது.
ஆகவே அந்த கடித வரிகளில் இயல்பாகவே கதிரின் கவனம் சென்றது.
பீரோவில் பொருத்தப்பட்டு இருந்த நிலைக்கனாடியின் முன்பாக நின்றபடி அதை பார்க்கும் பாவனையில் அவனை ஓரக்கண்ணால் கவனித்துக்கொண்டு இருந்தேன் நான். அவனிடம் இருந்து அதை வாங்கவேண்டும் என்று நினைக்கவில்லை நான்.
எனக்குள் ஒரு எண்ணம். அவனுக்கும் ஓரினசேர்க்கையில் நாட்டம் இருக்கிறதோ என்கிற சந்தேகம் லேசாக இருந்தது.
அது உண்மை என்றால் அந்த கடித வரிகள் அவனை தூண்டிவிடவும் கூடும். வீட்டிலோ யாருமே இல்லை. அவனுக்கும் கொஞ்ச நேரம் இங்குதான் இருந்தாக வேண்டும். அந்த நேரத்தை அவன் "என்னுடன் உறவு கொண்டு கழிக்கலாமே" என்று கூட நினைக்கலாமே. ஆகவே அவனை தடுக்க முயற்சிக்கவில்லை நான்.
அதை படித்ததும் ..
என்ன நினைத்தானோ..
புத்தகத்தை மூடி வைத்து விட்டு ஒரு சோம்பல் முறித்தபடி எழுந்து என்னை நெருங்கினான் கதிர்.
"இன்று கண்டிப்பாக உனக்கு சுகம் கிடைக்கபோகிறது." - என் மனம் உடம்பிடம் சொல்ல அது உற்சாகத்துடன் அந்த சுகத்தை அனுபவிக்க தன்னை தயார்படுத்திக்கொள்ள ஆரம்பித்தது.
(தொடரும்...)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment