அன்று சனிக்கிழமை. முதல் நாள் தான் கிறிஸ்துமஸ் விடுமுறை தினம். சாதாரணமாக என் காரியாலயத்தில் வார விடுமுறை சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களும் தான். ஆகவே இப்போது முழுசாக மூன்று நாட்கள் அலுவலகம் செல்ல வேண்டியது இல்லை. உடன் தாங்கும் இருவரும் அடுத்த புதன் கிழமை தான் வருவார்கள்.
வீட்டு உரிமையாளரின் குடும்பத்தினரும அரையாண்டு பள்ளி விடுமுறையை ஒட்டி ஊருக்கு சென்று இருக்கிறார்கள். ஆகவே தனிமை தான்.
இந்த சமயத்தில் ஒரு ஆண்மகனின் தொடுகை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஒரு ஆண்மகனின் தழுவல் கிடைத்தால் எவ்வளவு இதமாக இருக்கும்?
முதல் நாள் வந்த ரமேஷின் கடிதம் வேறு என்னை அலைக்கழித்தது. அன்று இரவு முழுக்க விதம் விதமாக மோகனும், ரமேஷும் மாறி மாறி நினைவில் வந்து என்னை அனுபவித்தார்கள். எப்போது உறங்கினேன் என்று எனக்கே தெரியாது.
காலையில் கண் விழித்தபோது நன்றாக பொழுது விடிந்து விட்டிருந்தது. சுவர் கடிகாரம் மணி பதினொன்று என்று காட்டியது. நிதானமாக எழுந்து......
இன்று என்ன செய்யலாம் என்று யோசித்தேன். என் ஒருவனுக்காக சமையல் செய்து கொள்ள சோம்பலாக இருந்தது. ஆகவே வெளியே சென்று சாபிட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.
மீண்டும் ஒரு முறை ரமேஷின் கடிதத்தை எடுத்து படிக்க தோன்றியது. படித்து விட்டு என்னை சூடேற்றிய வரிகளை பேனாவினால் அடிக்கோடிட்டு அப்படியே அங்கிருந்த "குமுதம்" பத்திரிகையில் சொருகி படுக்கை அறையில் கட்டிலை ஒட்டி இருந்த ஸ்டூல் மீது வைத்து விட்டு குளிக்க சென்றேன்.
ஷவரின் கீழ் நின்று நனைந்து குளிக்கும் போது மோகனின் நினைவு வந்தது.
அவருடன் ஒரு முறை திருச்சி சென்ற சமயம் இருவரும் ரூம் எடுத்து தங்கியதும் அப்போது ஷவரின் கீழ் குளித்தபோது அவர் என்னை அங்குலம் அங்குலமாக உரசி ருசித்து சூடேற்றி அனுபவித்தது நினைவுக்கு வந்தது. (அது ஒரு தனி கதை. எழுத ஆரம்பித்தால் இங்கு ஐந்து இடுகைகள் வரும்..)
சற்று நேரம் அடங்கி கிடந்த மனசு மீண்டும் ஆர்ப்பரிக்க தொடங்கியது. எவ்வளவு நேரம் என்னை மறந்து நின்றேனோ தெரியாது. ஒரு வழியாக குளித்து முடித்து விட்டு தலை துவட்டி இடுப்பில் துவாலையை சுற்றிக்கொண்டு வெளியே வந்து தலை வாரிக்கொண்டு இருந்த நேரத்தில் அழைப்பு மணி ஒலித்தது.
"இந்த நேரத்தில் யாராக இருக்கும்?" என்ற யோசனையுடன் சென்று கதவை திறந்தேன்.
அங்கு..
வாட்டசாட்டமான உடம்புடனும் வசீகரமான புன்னகையுடனும் அந்த வாலிபன் நின்று கொண்டு இருந்தான்.
(தொடரும்...)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment