3. "சரச கலாசாலையிலே பட்டம் பெற்றவனோ - அவன்
சாகசக் கலைக் கூடத்திலே பாடம் கற்றவனோ"
- கவியரசு கண்ணதாசன்.
ஏதோ ஒரு வேகத்தில் பிரகாஷிடம் துடுக்காகப் பேசிவிட்டு வந்துவிட்டேனே தவிர அப்படி ஒன்றும் நான் ஒரு தைரியசாலி அல்லன்.
அவன் உடனே வேகமாக ரியாக்ட் பண்ணியிருந்தால் நான் அப்படியே பாண்ட்டிலேயே நம்பர் ஒன் போயிருக்கக் கூடிய ஆள் தான்.
என்னுடைய நல்லநேரம் என் பேச்சைக் கேட்டதும் அவனும் அவனது நண்பர்களும் ஒரு கணம் திகைத்துப் போனார்கள். அந்த கணநேரத்
திகைப்பை சட்டென்று பயன்படுத்திக்கொண்டு நான் தப்பித்து வந்துவிட்டேன்.
ஒருவழியாக எனது வகுப்பை அடைந்து முதல் வரிசையிலேயே இடம் பிடித்து உட்கார்ந்து விட்டேன். முதல் நாள் என்பதால் அனைவரையும்
அடுத்துவந்த பேராசிரியர்களும், உதவிப் பேராசிரியர்களும் அறிமுகம் செய்துகொண்டு மேலோட்டமாக பாடங்களை எடுத்தார்கள்.
பாடத்தை கவனித்துவந்த போதிலும் இடை இடையில் என் மனதில் காலையில் பார்த்த
பிரகாஷின் கட்டுடலும், ஹாஸ்டலில் இருந்த ராபர்ட்டின் நினைவும் வந்து வந்து
போய்க்கொண்டே இருந்தன.
மதியம் லஞ்ச் இடைவேளையில் கான்ட்டீனுக்கு வழிகேட்டுக்கொண்டு சென்றபோது உள்ளுக்குள்ளே பயம் பூரானாக அரிக்க ஆரம்பித்தது.
பிரகாஷை பார்த்துவிட்டால் என்ன பண்ணுவது? காலையில் துடுக்காக பேசியதற்காக
அவன் இப்போது மடக்கிவிட்டான் என்றால் என்ன செய்வது? எப்படிச் சமாளிப்பது?
என்ற எண்ண ஓட்டத்துடன் கான்ட்டீனுக்குள் நுழைந்தவன் ... மாணவர்கள்
கூட்டமாக இருந்ததால் இந்தக் கூட்டத்துக்குள் பிரகாஷ் என்னை எப்படிப்
பார்க்கமுடியும் என்று நினைத்து என்னை சமாதனப் படுத்திக்கொண்டு ஒரு ப்ளேட்
தக்காளி சாதத்தை வாங்கிக்கொண்டு ஒரு மூலையில் இருந்த டேபிளுக்கு சென்று
சாப்பிட ஆரம்பித்தேன். என் வகுப்பில் மாணவர்களோடு இன்னும் கலந்து
பழகாததால் தனித்தே இருந்தேன் நான்.
அப்போது "ஹலோ.. என்ன தனியா வந்துட்டே?" என்று கேட்டபடி என் அருகில் வந்தான் கணேசன். என் வகுப்பில் தான் படிக்கிறான்.
இன்னும் சொல்லப்போனால் எனக்கு பக்கத்து சீட் தான் அவன்.
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லே. இன்னிக்கு தானே பர்ஸ்ட் டே. இன்னும் யாரும் பழக்கமாகலேயே. அதனாலேதான்" என்றேன் நான்.
"இப்போ நான் பழக்கமாகிக்கலாமா?' என்றான் கணேசன்.
" why not? கண்டிப்பா" என்றேன் நான். இருவரும் எங்களைப் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தோம்.
திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் கணேசன். பி.யு.சியை அங்கேயே முடித்தவன் இங்கு சென்னையில் அரசுப் பணியில் அவனது அண்ணன் குடும்பத்துடன் இருக்கவே, சென்னைக்கு வந்து அண்ணன் வீட்டில் தங்கிக்கொண்டு பட்டப் படிப்பை தொடர வந்திருக்கிறான்.
- கவியரசு கண்ணதாசன்.
ஏதோ ஒரு வேகத்தில் பிரகாஷிடம் துடுக்காகப் பேசிவிட்டு வந்துவிட்டேனே தவிர அப்படி ஒன்றும் நான் ஒரு தைரியசாலி அல்லன்.
அவன் உடனே வேகமாக ரியாக்ட் பண்ணியிருந்தால் நான் அப்படியே பாண்ட்டிலேயே நம்பர் ஒன் போயிருக்கக் கூடிய ஆள் தான்.
என்னுடைய நல்லநேரம் என் பேச்சைக் கேட்டதும் அவனும் அவனது நண்பர்களும் ஒரு கணம் திகைத்துப் போனார்கள். அந்த கணநேரத்
திகைப்பை சட்டென்று பயன்படுத்திக்கொண்டு நான் தப்பித்து வந்துவிட்டேன்.
ஒருவழியாக எனது வகுப்பை அடைந்து முதல் வரிசையிலேயே இடம் பிடித்து உட்கார்ந்து விட்டேன். முதல் நாள் என்பதால் அனைவரையும்
அடுத்துவந்த பேராசிரியர்களும், உதவிப் பேராசிரியர்களும் அறிமுகம் செய்துகொண்டு மேலோட்டமாக பாடங்களை எடுத்தார்கள்.
பாடத்தை கவனித்துவந்த போதிலும் இடை இடையில் என் மனதில் காலையில் பார்த்த
பிரகாஷின் கட்டுடலும், ஹாஸ்டலில் இருந்த ராபர்ட்டின் நினைவும் வந்து வந்து
போய்க்கொண்டே இருந்தன.
மதியம் லஞ்ச் இடைவேளையில் கான்ட்டீனுக்கு வழிகேட்டுக்கொண்டு சென்றபோது உள்ளுக்குள்ளே பயம் பூரானாக அரிக்க ஆரம்பித்தது.
பிரகாஷை பார்த்துவிட்டால் என்ன பண்ணுவது? காலையில் துடுக்காக பேசியதற்காக
அவன் இப்போது மடக்கிவிட்டான் என்றால் என்ன செய்வது? எப்படிச் சமாளிப்பது?
என்ற எண்ண ஓட்டத்துடன் கான்ட்டீனுக்குள் நுழைந்தவன் ... மாணவர்கள்
கூட்டமாக இருந்ததால் இந்தக் கூட்டத்துக்குள் பிரகாஷ் என்னை எப்படிப்
பார்க்கமுடியும் என்று நினைத்து என்னை சமாதனப் படுத்திக்கொண்டு ஒரு ப்ளேட்
தக்காளி சாதத்தை வாங்கிக்கொண்டு ஒரு மூலையில் இருந்த டேபிளுக்கு சென்று
சாப்பிட ஆரம்பித்தேன். என் வகுப்பில் மாணவர்களோடு இன்னும் கலந்து
பழகாததால் தனித்தே இருந்தேன் நான்.
அப்போது "ஹலோ.. என்ன தனியா வந்துட்டே?" என்று கேட்டபடி என் அருகில் வந்தான் கணேசன். என் வகுப்பில் தான் படிக்கிறான்.
இன்னும் சொல்லப்போனால் எனக்கு பக்கத்து சீட் தான் அவன்.
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லே. இன்னிக்கு தானே பர்ஸ்ட் டே. இன்னும் யாரும் பழக்கமாகலேயே. அதனாலேதான்" என்றேன் நான்.
"இப்போ நான் பழக்கமாகிக்கலாமா?' என்றான் கணேசன்.
" why not? கண்டிப்பா" என்றேன் நான். இருவரும் எங்களைப் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தோம்.
திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் கணேசன். பி.யு.சியை அங்கேயே முடித்தவன் இங்கு சென்னையில் அரசுப் பணியில் அவனது அண்ணன் குடும்பத்துடன் இருக்கவே, சென்னைக்கு வந்து அண்ணன் வீட்டில் தங்கிக்கொண்டு பட்டப் படிப்பை தொடர வந்திருக்கிறான்.
சற்று பருமனான உடல்வாகு. இளநரை தலைமுழுக்க வியாபிக்க ஆரம்பித்திருந்தது.
நிறம் என்னைவிட கருப்பு தான்.
ஆனால் நட்புக்கு நிறம், இனம், மதம், ஜாதி இதெல்லாம் ஏது? இருவரும் நண்பர்களாக ஆரம்பித்துவிட்டோம்.
சாப்பிட்டு முடித்துவிட்டு வாஷ் பேசினில் கை கழுவிக்கொண்டு வெளியே வந்தபோது...
பிரகாஷ் வருவதை கவனித்துவிட்டேன். சட்டென்று கணேசனுக்கு பின்னால் அவன் கண்ணில் படாதபடி என்னை மறைத்துக்கொண்டு நின்றுவிட்டேன்.
பிரகாஷ் தனியாக வரவில்லை.. கூட ஒரு நண்பனுடம் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே
வந்துகொண்டிருந்தான். அவசரத்தில் அந்த நண்பனை முதலில் கவனிக்கவில்லை நான்.
சட்டென்று மனசுக்குள் பொறி தட்டியது. அவன் யார் கூடவோ தோள்மேல
கைபோட்டுகிட்டு - அவன் பதிலுக்கு பிரகாஷோட இடுப்பை சுற்றி வளைத்து
கைபோட்டுகிட்டு வரானே. யார் அவன்..? என்று பார்க்கலாமா..
வேண்டாம்.. நாம பாக்குறப்போ அவன் நம்மை கவனிச்சுட்டா எனன பண்ணுவது?
அப்படி இந்த கூட்டத்துலே நம்மை அவன் கவனிச்சுட்டா கூட்டத்துலே கலந்து
போய்விடலாம். என்று முடிவு செய்வதற்குள் பிரகாஷும் அந்த நண்பனும்
காண்ட்டீன் படிகளில் ஏறி உள்ளே வந்துகொண்டிருந்தார்கள்.
பிரகாஷின் இடுப்பை வளைத்து பிடித்துக்கொண்டு நெருக்கமாக வந்தவனைப் பார்த்ததும் அதிர்ந்தேன் நான்.
அவன்..
எனது ரூம் மேட் ராபர்ட்.
(தொடர்ந்து வரும்.)
No comments:
Post a Comment