Monday, July 14, 2014

முரட்டுச் சிங்கத்துடன் மூன்று வருடங்கள்- 1

1.  "கண்முன்பு அழகான ஆண்மை நான் கல் அல்ல கனிவான பெண்மை"  -  கவியரசு கண்ணதாசன்.

ஒரு வழியாக பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு, பி.யு. சி யிலும்
உன்னைப்பிடி என்னைப்பிடி என்று பார்டர் மார்க்குகள் எடுத்து
பாசாகிவிட்டேன்.
 
நான் படிப்பைப் பொறுத்தவரை அப்படி ஒன்றும் ப்ரில்லியன்ட் ஸ்டூடன்ட் கிடையாது.  அதனால் எனக்கு பி. ஏ. வில் தான் இடம் கிடைத்தது.  அதே சமயம் என் அப்பாவுக்கு பணியில் இடமாற்றமும் கிடைத்தது.  அதனால் நான் ஹாஸ்டலில் தங்கி கல்லூரியில் படிப்பது என்று முடிவானது. 


ஆகவே நான் சென்னையிலும் என் பெற்றோர் கும்பகோணத்திலும் இருப்பது என்று முடிவெடுக்கப்பட்டு நான் சென்னையிலேயே
கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படிக்க ஆரம்பித்தேன்.

முதல் நாள் என் அப்பா என் கூட வந்து ஹாஸ்டலை பார்வையிட்டார்.  எனது அறையில் என் கூட இருப்பவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள

ஆரம்பித்தார்.  பெற்றவர்களின் கவலையே தனி.   மகனுக்கு ஏற்படும் புதிய சிநேகிதங்கள் எப்படி அமைகின்றன என்பது தானே அவனது
எதிர்காலத்தையே தீர்மானிக்கின்றன.?
 அப்போது அறிமுகமானவன் தான் ராபர்ட்.   எனக்கு ஒரு வருடம் சீனியர். 

மாநிறம்.   அதே சமயம்  கட்டுடல்.  திட்டமான மீசை.  சின்னக் கண்கள்.  ஆனால் அந்தக் கண்களின் பார்வை பார்ப்பவர்களை கட்டிப்போடும்.


என் அப்பாவிடம் மிகுந்த மரியாதையுடன் " அங்கிள் அங்கிள்" என்று அழைத்துப் பழகினான் அவன். அப்பாவுக்கு அவனை மிகவும் பிடித்துப்


போனது.  சரளமான ஆங்கிலத்தில் அவருடன் உரையாடினான்.  என் அப்பாவுக்கு யாராவது ஆங்கிலத்தில் பேசினால் ரொம்பவும் பிடிக்கும்.


(எதிர் வீட்டு மோகனை அவருக்கு மிகவும் பிடிக்க அவனது சரளமான ஆங்கிலப் பேச்சும் ஒரு காரணம்).  அந்த வகையில் ராபர்டையும் அவருக்கு


பிடித்துப்போனது.



எனக்கும் அவனை ரொம்பப் பிடித்துப் போனது.  காரணம் அவனது உடம்பு.  வயதுக்கு மீறிய வளர்த்தி உடம்பின் எல்லா அங்கங்களிலும் தெரிந்தது.


நிறம் என்னவோ கம்மிதான்.  மோகனைப்போல அடிக்க வரும் சிவப்போ, ரமேஷைப் போல சந்தன நிற மேனியோ அல்ல. 


மாநிறம் தான்.  ஆனால் அந்த முகத்தில் வசீகரம் இருந்தது.  பார்வையில் ஒரு
அலட்சியமும், அடுத்தவரைச் சுண்டி இழுக்கும் தன்மையும் இருந்தது.


யாரானாலும் சரி.. சட்டென்று சிநேகம் செய்துகொள்ளவேண்டும் என்று தோன்றிவிடும்.  எனக்கும் தோன்றியது.  வெறும் சிநேகத்தோடு இது


இருந்துவிடக்கூடாது.  அதற்கும் மேலே கூட போகவேண்டும் என்று கூடத் தோன்றிவிட்டது.


என் மன ஓட்டத்துக்கு ஒரு லகான் போட்டது போல என் அப்பாவின் பேச்சு - என்னை நிதர்சனத்துக்கு கொண்டு வந்தது.


 "ரொம்ப டீசன்ட்டான பையன்.  நான் என்னமோ ரொம்ப பயந்துக்கிட்டு இருந்தேன்ப்பா.  தனியா இவன் எப்படி இருக்கப் போறானோ
கூடத் தங்கற பசங்க நல்லவங்களா இருக்கணுமே என்று கவலையா இருந்தது.  உன்னைப் பார்த்ததும் அந்தக் கவலை போயிடுச்சு  ராபர்ட்.  இவனை கவனமா பார்த்துக்க.  இவனுக்கு ஒரு அண்ணன் மாதிரி இருந்து கெட்டுப்போகாம கண்டிப்பா இருந்து படிப்போட நாலு நல்ல பழக்க
வழக்கங்களையும் சொல்லிக்கொடு.  இவனுக்கு அதெல்லாம் ஒரு எழவும் தெரியாது".  என்று பேசிக்கொண்டே போனார் அவர்.


அவரது கவலை அவருக்கு.   மூத்த மகன்.  நல்லபடியாகப் படித்து முன்னுக்கு வரவேண்டுமே என்று எல்லா அப்பாக்களுக்கும் இருக்கும் கவலை
அக்கறை அவருக்கும் இருந்தது. 

"டோன்ட் வொர்ரி அங்கிள்.  ஐ வில் டேக் கேர். கண்டிப்பா என் தம்பி மாதிரியே
பாத்துக்குறேன்"  என்ற ராபர்ட்டின் உறுதி மொழியில் அவருக்கு
நம்பிக்கை வர,  புகுந்த வீட்டில் பெண்ணை விட்டுவிட்டுப் போகும் தந்தையைப் போல விடை பெற்றுச் சென்றார் அவர்.

அவர் சென்றதும் என்னை ஒருமுறை உற்றுப் பார்த்தான் ராபர்ட். 


"என்ன அப்படி பாக்குறே?" என்றேன் நான்.  

உடனே,"ஹேய்.  என்ன இது.  மரியாதை இல்லாம பேசறே.  நான் உனக்கு சீனியர்.  எல்லா விதத்துலேயும். வயசுலே கூட பெரியவன். 
இப்படித்தான் மரியாதை இல்லாம ஒருமையிலே பேசறதா?"  என்ற அவன் குரலில் இருந்த கண்டிப்பு என்னை விதிர்விதித்து போக வைத்தது.

"சாரி.  இனிமேல் அப்படி பேசமாட்டேன்.  உங்களை அண்ணான்னு கூப்பிடட்டுமா?" என்றேன் நான்.


"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.  ராபர்ட்டுன்னு பெயர் சொல்லியே கூப்பிடு.  பட்.. மரியாதையோட "நீங்க வாங்க" போட்டு பேசு." என்றான் அவன்.


சரிஎன்று தலையை ஆட்டினேன் நான்.


"அதுசரி.. முதல் நாளே காலேஜுக்கு லேட்டா போகாதே.  நேரமாகுது.  கிளம்பு.  மத்ததை சாயங்காலம் பேசிக்கலாம்" என்றான் ராபர்ட்.


சரி என்று கிளம்பி கல்லூரிக்கு சென்றேன் நான்.   போகும் பொழுது வழியெல்லாம் மனசுக்குள் பயம் சிலந்திக்கூடாக அடைக்க ஆரம்பித்தது.


"முதல் நாள்..  ராகிங் பண்ணுவாங்களே.  எப்படி எல்லாம் இருக்குமோ?" என்ற
கவலையும், பயமும் பாடாகப் படுத்த கல்லூரி வாசலில் காலெடுத்து வைத்தேன்
நான்.

(
தொடர்ந்து வரும்..)


No comments:

Post a Comment