2."தேக்கு மரம் உடலைத் தந்தது. சின்ன யானை நடையைத் தந்தது.
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது. பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது. " - கவியரசு கண்ணதாசன்.
கல்லூரி வாசலில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சீனியர்கள் - அவர்களுக்கு நடுவே புள்ளிமானாய் மிரண்ட பார்வையுடன் ஜூனியர்கள்.
"புதுசு மாதிரி தயங்கி தயங்கி நிக்கக் கூடாது. தைரியமா நடந்துகிட்டு ரொம்ப
பழகின இடத்துக்கு போகிறமாதிரி போய்கிட்டே இருக்கணும்." என் ரமேஷ் நான்
பி. யு. சி. சேர்ந்த பொழுது சொல்லிக்கொடுத்த பாடம் நினைவுக்கு வர ஒரு
சீனியர் மாதிரி பாவனை பண்ணிக்கொண்டே நான் நடந்தேன்.
ஆனால் உண்மையிலேயே சீனியராக இருப்பது வேறு. சீனியர் மாதிரி நடிப்பது
வேறு. எனது அதீத பாவனையே என்னைக் காட்டிக் கொடுத்து விட்டிருக்கவேண்டும்.
"ஹேய். வா.. இங்கே" - என்று அங்கிருந்த குழுவில் ஒரு குழு என்னைக் கூப்பிட்டு அழைத்தது.
நடுநாயகமாக நின்றிருந்தான் ஒரு மாணவன். அவன் தான் அந்த கூட்டத்துக்கு
லீடர் என்று அவனைச் சுற்றி இருந்த ஜால்ரா கூட்டமே காட்டிக் கொடுத்துவிட்டது. வேறு வழி இல்லாமல் அவர்களை நோக்கிச் சென்றேன் நான்.
"பிரகாஷ்.. பாவம்டா.. பச்சைப் புள்ளை மாதிரி இருக்கான். பால்வடியும்
முகம்டா" - சொன்னவன் நிஜமாகவே சொன்னானோ இல்லை கிண்டலுக்காக சொன்னானோ அவனுக்கே வெளிச்சம்!.
"என்ன நீ. விறுவிறுன்னு வேகமா போறே?. சாருக்கு ஒரு வணக்கம் போடாம?" என்று இன்னொரு குரல்.
"யாரு.. இங்கே ..சார்?" - பொத்தாம் பொதுவாக ஒரு வணக்கம் போட்டுவைத்தேன் நான்.
என்னையே குறுகுறுப்பாக பார்த்தான் அந்த பிரகாஷ். நானும் அவனை ஒரு முறை நிமிர்ந்து நோக்கினேன்.
சீனியர் என்பதற்கு அடையாளமான சம்பா கோதுமையில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்ட மாதிரியான நிறத்துடன் கூடிய உடற்கட்டு. அது என்ன சீனியருக்கு என்று தனியாக உடற்கட்டு ஏதாவது இருக்கிறதா என்று கேட்காதீர்கள். வயதில் இரண்டு மூன்று வயது பெரியவன் இல்லையா. ஆகவே அந்த வயதுக்கேற்ற வளர்ச்சி கட்டாயம் உடம்பில் தெரியுமே. அவனுக்கும் அது தெரிந்தது.
இளமை மதர்த்து திமிறிய மார்பு. வலுவேறிய தோள்கள். செழிப்பான புஜங்கள். தட்டையான வயிறு.
அதற்கு மேல் அவனைப் பார்க்கமுடியவில்லை.
"என்னடா.. உறுத்துப் பாக்கிறே. என் உடம்ப சட்டை இல்லாம பாக்கணும்ன்னு தோணுதா?" -
சட்டென்று கேட்டுவிட்டான் பிரகாஷ்.
"ம்ம். இல்லே.. வந்து.." என்று திக்கித் திணறினேன் நான்.
கிட்டே வந்து என் தோளில் கைவைத்து பின்னால் தள்ளியவன், "பாருடா.. நல்லா
பாரு." என்று சட்டையை கழற்றிவிட்டு திறந்த மார்புடன் நின்றே விட்டான் அவன்.
இதற்குள் சுதாரித்துக்கொண்ட நான் பகபகவென்று சிரிக்க ஆரம்பித்தேன்.
பிரகாஷும், அவனது கூட்டமும் திகைத்துப் போனார்கள்.
"ஏண்டா சிரிக்கறே?" என்றான் பிரகாஷ். குரலில் எரிச்சல் கலந்திருந்தது.
"இல்லே. பொதுவா ராக்கிங்க்லே சீனியர்ஸ் தான் எங்களை மாதிரி புதுப் பசங்களை சட்டைய கழட்டச் சொல்லி - மானத்தை வாங்குவாங்க. ஆனா இங்கே ஒரு ஜூனியர் முன்னாலே சட்டைய கழட்டிக் காட்டுற சீனியரை இன்னிக்கு தான் பாக்குறேன்." என்று தைரியமாக சொல்லிவிட்டேன் நான்.
அந்த சின்னக் குழுவே விக்கித்து நின்றது.
சுதாரித்துக்கொண்ட பிரகாஷ் என்னை பார்த்து கை நீட்டி ஏதோ சொல்லவரவும், காலேஜ் துவங்குவதற்கான மணி ரிங்காகவும் சரியாக இருந்தது.
"டயம் இருந்தா ஆப்டர்நூன் சந்திப்போம்." என்று சொல்லிவிட்டு நான்
அங்கிருந்து சிட்டாக பறந்து எனது வகுப்பை நோக்கி வேகவேகமாக போய்விட்டேன்.
ஆனாலும் - என் மனக்கண் முன்னால் - முன் வெகு அருகில் தெரிந்த பிரகாஷின் கட்டுடல் -
மன்மதத் தனமாக மதர்த்து செழித்திருந்த அந்த மார்பு.. அதில் அலையாக பரவிய
மெல்லிய ரோமமும், வட்டவடிவான முலைகளும், அதில் புள்ளிவைத்து அழுத்தியது போல இருந்த காம்புகளும்... - அழுத்தமாக பதிந்து...
"இவன் மட்டும் என்னை இறுக்கி ஒரு அணை அணைச்சா எப்படி இருக்கும்?" -
சட்டென்று எழுந்த நினைவலைக்கு லகான் போட்டபடி வகுப்புக்குள் நுழைந்தேன்
நான்.
(தொடர்ந்து வரும்..)
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது. பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது. " - கவியரசு கண்ணதாசன்.
கல்லூரி வாசலில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சீனியர்கள் - அவர்களுக்கு நடுவே புள்ளிமானாய் மிரண்ட பார்வையுடன் ஜூனியர்கள்.
"புதுசு மாதிரி தயங்கி தயங்கி நிக்கக் கூடாது. தைரியமா நடந்துகிட்டு ரொம்ப
பழகின இடத்துக்கு போகிறமாதிரி போய்கிட்டே இருக்கணும்." என் ரமேஷ் நான்
பி. யு. சி. சேர்ந்த பொழுது சொல்லிக்கொடுத்த பாடம் நினைவுக்கு வர ஒரு
சீனியர் மாதிரி பாவனை பண்ணிக்கொண்டே நான் நடந்தேன்.
ஆனால் உண்மையிலேயே சீனியராக இருப்பது வேறு. சீனியர் மாதிரி நடிப்பது
வேறு. எனது அதீத பாவனையே என்னைக் காட்டிக் கொடுத்து விட்டிருக்கவேண்டும்.
"ஹேய். வா.. இங்கே" - என்று அங்கிருந்த குழுவில் ஒரு குழு என்னைக் கூப்பிட்டு அழைத்தது.
நடுநாயகமாக நின்றிருந்தான் ஒரு மாணவன். அவன் தான் அந்த கூட்டத்துக்கு
லீடர் என்று அவனைச் சுற்றி இருந்த ஜால்ரா கூட்டமே காட்டிக் கொடுத்துவிட்டது. வேறு வழி இல்லாமல் அவர்களை நோக்கிச் சென்றேன் நான்.
"பிரகாஷ்.. பாவம்டா.. பச்சைப் புள்ளை மாதிரி இருக்கான். பால்வடியும்
முகம்டா" - சொன்னவன் நிஜமாகவே சொன்னானோ இல்லை கிண்டலுக்காக சொன்னானோ அவனுக்கே வெளிச்சம்!.
"என்ன நீ. விறுவிறுன்னு வேகமா போறே?. சாருக்கு ஒரு வணக்கம் போடாம?" என்று இன்னொரு குரல்.
"யாரு.. இங்கே ..சார்?" - பொத்தாம் பொதுவாக ஒரு வணக்கம் போட்டுவைத்தேன் நான்.
என்னையே குறுகுறுப்பாக பார்த்தான் அந்த பிரகாஷ். நானும் அவனை ஒரு முறை நிமிர்ந்து நோக்கினேன்.
சீனியர் என்பதற்கு அடையாளமான சம்பா கோதுமையில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்ட மாதிரியான நிறத்துடன் கூடிய உடற்கட்டு. அது என்ன சீனியருக்கு என்று தனியாக உடற்கட்டு ஏதாவது இருக்கிறதா என்று கேட்காதீர்கள். வயதில் இரண்டு மூன்று வயது பெரியவன் இல்லையா. ஆகவே அந்த வயதுக்கேற்ற வளர்ச்சி கட்டாயம் உடம்பில் தெரியுமே. அவனுக்கும் அது தெரிந்தது.
இளமை மதர்த்து திமிறிய மார்பு. வலுவேறிய தோள்கள். செழிப்பான புஜங்கள். தட்டையான வயிறு.
அதற்கு மேல் அவனைப் பார்க்கமுடியவில்லை.
"என்னடா.. உறுத்துப் பாக்கிறே. என் உடம்ப சட்டை இல்லாம பாக்கணும்ன்னு தோணுதா?" -
சட்டென்று கேட்டுவிட்டான் பிரகாஷ்.
"ம்ம். இல்லே.. வந்து.." என்று திக்கித் திணறினேன் நான்.
கிட்டே வந்து என் தோளில் கைவைத்து பின்னால் தள்ளியவன், "பாருடா.. நல்லா
பாரு." என்று சட்டையை கழற்றிவிட்டு திறந்த மார்புடன் நின்றே விட்டான் அவன்.
இதற்குள் சுதாரித்துக்கொண்ட நான் பகபகவென்று சிரிக்க ஆரம்பித்தேன்.
பிரகாஷும், அவனது கூட்டமும் திகைத்துப் போனார்கள்.
"ஏண்டா சிரிக்கறே?" என்றான் பிரகாஷ். குரலில் எரிச்சல் கலந்திருந்தது.
"இல்லே. பொதுவா ராக்கிங்க்லே சீனியர்ஸ் தான் எங்களை மாதிரி புதுப் பசங்களை சட்டைய கழட்டச் சொல்லி - மானத்தை வாங்குவாங்க. ஆனா இங்கே ஒரு ஜூனியர் முன்னாலே சட்டைய கழட்டிக் காட்டுற சீனியரை இன்னிக்கு தான் பாக்குறேன்." என்று தைரியமாக சொல்லிவிட்டேன் நான்.
அந்த சின்னக் குழுவே விக்கித்து நின்றது.
சுதாரித்துக்கொண்ட பிரகாஷ் என்னை பார்த்து கை நீட்டி ஏதோ சொல்லவரவும், காலேஜ் துவங்குவதற்கான மணி ரிங்காகவும் சரியாக இருந்தது.
"டயம் இருந்தா ஆப்டர்நூன் சந்திப்போம்." என்று சொல்லிவிட்டு நான்
அங்கிருந்து சிட்டாக பறந்து எனது வகுப்பை நோக்கி வேகவேகமாக போய்விட்டேன்.
ஆனாலும் - என் மனக்கண் முன்னால் - முன் வெகு அருகில் தெரிந்த பிரகாஷின் கட்டுடல் -
மன்மதத் தனமாக மதர்த்து செழித்திருந்த அந்த மார்பு.. அதில் அலையாக பரவிய
மெல்லிய ரோமமும், வட்டவடிவான முலைகளும், அதில் புள்ளிவைத்து அழுத்தியது போல இருந்த காம்புகளும்... - அழுத்தமாக பதிந்து...
"இவன் மட்டும் என்னை இறுக்கி ஒரு அணை அணைச்சா எப்படி இருக்கும்?" -
சட்டென்று எழுந்த நினைவலைக்கு லகான் போட்டபடி வகுப்புக்குள் நுழைந்தேன்
நான்.
(தொடர்ந்து வரும்..)
No comments:
Post a Comment