Monday, July 14, 2014

முரட்டுச் சிங்கத்துடன் மூன்று வருடங்கள் - 4

4.  பசும் தங்கம் உமது எழில்  அங்கம் - அதன்
அசைவில் பொங்கும் நயம் காணவே"  -   கவிஞர் மருதகாசி 


ராபர்ட்டும் பிரகாஷும் நண்பர்களா?   -  
ஏற்கெனவே..  காலையில் ராபர்ட் என்னை அதிகாரமாக பேசி நடத்தியதும் அவன் கொஞ்சம் கரடு முரடானவன் என்பதை புரிந்துகொண்டேன்.  

இப்போது பிரகாஷ் காலையில் அவனுக்கு ஏற்பட்ட மூக்குடைப்பை ராபர்ட்டுடன்
பகிர்ந்துகொள்வானோ?

அதை கேட்டால் ராபர்ட் என்ன செய்வான்? 

அட.. அப்படி என்ன செய்துவிடமுடியும்?   நாங்கள் இருப்பதோ ஹாஸ்டலில்.  அங்கு
வெளியாட்களுக்கு அனுமதி இல்லையே.  ஆகவே பிரகாஷ் அங்கு வந்து எங்களை
சந்திப்பதற்கில்லை
.  அப்படி இருக்க இருவரும் சந்தித்துக்கொள்ள வாய்ப்பேதும் இல்லையே.

ராபர்ட் படிப்பதோ பி.காம் இறுதி வருடம்.  அப்படியானால் பிரகாஷும் அதே வருடம் தான் இருக்கவேண்டும்.  அதே பிரிவில் தான் படிக்கவேண்டும்.

நானோ பி.ஏ. வரலாறு.  ஆகவே சந்தித்துக்கொள்ள சான்ஸ் என்பது சுத்தமாக இல்லை.  ஆகவே நாம் பயப்படவேண்டாம் என்று என்னையே தேற்றிக்கொண்டேன் நான்.

பல்வேறு என்ன ஓட்டங்களில் இருந்த என்னை,"என்னடா..  தீவிரமா யோசிக்கறே?" என்ற கணேசனின் குரல் சுய நினைவுக்கு கொண்டு வந்தது.

"ஒன்னும் இல்லேடா.  நான் ஹாஸ்டல் ஸ்டூடண்டா?  அதனாலே வீட்டு நினைப்பு வந்துடுச்சு" என்று சமாளித்தேன் நான்.

"லஞ்ச் ஹவர் முடிய இன்னும் டயம் இருக்குடா.  நாம பர்ஸ்ட் டே மீட் பண்ணி
பிரெண்ட்ஸ் ஆகியிருக்கோம்.  அதனாலே ஒரு காபி சாப்பிட்டுவிட்டு போவோமே."
என்றான் கணேசன்.

"வேண்டாம்டா..  கூட்டம் அதிகமா இருக்கு.  இன்னொரு நாளைக்கு வருவோமே.  இப்போ கிளாசுக்கு போயிடுவோம்" என்றேன்
நான்."இல்லேடா ..  ப்ளீஸ்.  வாடா. " என்றவன்.   என் பதிலுக்கு காத்திருக்காமல் காபி டோக்கன் வாங்கச் சென்றான்.

எனக்கோ அங்கிருந்து போகவேண்டும் போலவும் இருந்தது.  வேண்டாம் என்றும் இருந்தது. 

பிரகாஷும் ராபர்ட்டும் சாப்பிடும் போது என்ன பேசிக்கொள்வார்கள்.?  பிரகாஷ்
ராபர்ட்டிடம் காலையில் நடந்ததை பகிர்ந்து கொள்வானா? என்று தெரிந்து
கொள்ளவேண்டும் போல இருந்தது.

அதே சமயம் பிரகாஷ் என்னைக் கவனித்துவிடக்கூடாதே?

அப்போது இரு கைகளிலும் காபிக்கோப்பை ததும்ப வந்துகொண்டிருந்தான் கணேசன். 

"சே.  வாட் எ
fool ஐ ஆம்?  அவனை சுமதுகொண்டு வைத்து வித்து மரம் மாதிரி நின்னுகிட்டு இருக்கேனே.  " என்று நினைத்தபடி  அவனிடம் சென்று "தேங்க்ஸ் கணா."  என்று காபிக்கோப்பையை வாங்கிக்கொண்டு வந்தவன்.

அங்கிருந்த இருவர் அமரும் டேபிளில் அமர்ந்துகொண்டேன்.  எதிரும் புதிருமாக இருவரும் அமர்ந்து கொண்டோம். 

நாங்கள் அமர்ந்திருந்த அந்த டேபிளுக்கு இரண்டு டேபிள்கள் தள்ளி அமர்ந்திருந்தார்கள் பிரகாஷும் ராபர்ட்டும். அவர்கள் பேசிக்கொள்வது கேட்கும் தூரத்தில் நாங்கள்.  ஆனால் அவர்களால் எங்களைப் பார்க்க முடியாது.

அந்த மாதிரியான அமைப்பு அந்த இடத்தில்..

நான் நினைத்த மாதிரியே  பேச்சு சென்றுகொண்டிருந்தது.

"இன்னிக்கு ஹாஸ்டல்லே உன்னோட புது ரூம் மேட் எப்படி இருக்கான்.  யாருடா." - என்று கேட்டான் பிரகாஷ்.

"புது பையன்டா.  சின்னப் பையன்." என்றான் ராபர்ட்.

"சின்னப்பையனா.   உனக்கு ஜாலிதான்.  விட்டுட மாட்டியே. ஒரு வருஷம்.  பென்ட் எடுத்துருவியே நீ." - என்றான் பிரகாஷ் சிரித்தபடி.

பதிலுக்கு புன்னகைத்த ராபர்ட்,"அது கிடக்கட்டும் மச்சீ.   காலையிலே புது
பசங்களை ராக் பண்ணினியா.?  எவன் மாட்டினான்? " என்று பிரகாஷை கேட்டான்.

"அட போடா..  அந்த கொடுமைய ஏண்டா கேக்குறே.  பாத்தா என் பூல் அளவு கூட இருக்க மாட்டான்.  பச்சப் புள்ளையாட்டம் இருந்தான். அவன் என்னடான்னா என்னையே மடக்கிட்டாண்டா?' என்றான் பிரகாஷ்.

"ரியலி..  என்னடா கதை அது.  கேக்க சுவாரஸ்யமா இருக்கு?' -  ஆவலுடன் கேட்டான் ராபர்ட்.

நடந்ததை சொன்னான் பிரகாஷ். 

கேட்டதும்
பெரிதாகச் சிரித்தபடியே, "பெரிய ஆளுதான்.  உன்னையவே இந்தப் போடு போட்டுட்டானே. நீயெல்லாம் சீனியர்னு சொல்லிக்காதே.  எனக்கு வெக்கமா இருக்கு" என்று நண்பனைச் சீண்டினான் ராபர்ட்.

"உனக்கு சிரிப்பா இருக்கா.  தோடா.  நீ இருந்திருந்தேன்னா தெரியும்."  என்றான் பிரகாஷ்.

"நான் மட்டும் உன் இடத்துலே இருந்து இருந்தேன்னா அவனை சும்மா விட்டிருக்க மாட்டேன்." - என்றான் ராபர்ட்.

"அய்யா என்ன பண்ணி இருப்பீங்களாம்?"-குத்தலாக கேட்டான் பிரகாஷ்.

"அவனை அப்படியே rape பண்ணி இருப்பேன்" - என்றான் ராபர்ட்.

கேட்டுக்கொண்டிருந்த என் உடல் ஒருமுறை சிலிர்த்து ஓய்ந்தது.
 (முரட்டுத்தனம் தொடரும்...)

முரட்டுச் சிங்கத்துடன் மூன்று வருடங்கள் - 3

3.   "சரச கலாசாலையிலே பட்டம் பெற்றவனோ - அவன் 
சாகசக் கலைக் கூடத்திலே பாடம் கற்றவனோ"

- கவியரசு கண்ணதாசன்.   


ஏதோ ஒரு வேகத்தில் பிரகாஷிடம் துடுக்காகப் பேசிவிட்டு வந்துவிட்டேனே தவிர அப்படி ஒன்றும் நான் ஒரு தைரியசாலி அல்லன்.

அவன் உடனே வேகமாக ரியாக்ட் பண்ணியிருந்தால் நான் அப்படியே பாண்ட்டிலேயே நம்பர் ஒன் போயிருக்கக் கூடிய ஆள் தான்.

என்னுடைய நல்லநேரம் என் பேச்சைக் கேட்டதும் அவனும் அவனது நண்பர்களும் ஒரு கணம் திகைத்துப் போனார்கள்.  அந்த கணநேரத்

திகைப்பை சட்டென்று பயன்படுத்திக்கொண்டு நான் தப்பித்து வந்துவிட்டேன்.

ஒருவழியாக எனது வகுப்பை அடைந்து முதல் வரிசையிலேயே இடம் பிடித்து உட்கார்ந்து விட்டேன்.  முதல் நாள் என்பதால் அனைவரையும்

அடுத்துவந்த பேராசிரியர்களும், உதவிப் பேராசிரியர்களும் அறிமுகம் செய்துகொண்டு மேலோட்டமாக பாடங்களை எடுத்தார்கள்.

பாடத்தை கவனித்துவந்த போதிலும் இடை இடையில் என் மனதில் காலையில் பார்த்த
பிரகாஷின் கட்டுடலும்,  ஹாஸ்டலில் இருந்த ராபர்ட்டின் நினைவும் வந்து வந்து
போய்க்கொண்டே இருந்தன.

மதியம் லஞ்ச் இடைவேளையில் கான்ட்டீனுக்கு வழிகேட்டுக்கொண்டு சென்றபோது உள்ளுக்குள்ளே பயம்  பூரானாக அரிக்க ஆரம்பித்தது.

பிரகாஷை பார்த்துவிட்டால் என்ன பண்ணுவது?  காலையில் துடுக்காக பேசியதற்காக
அவன் இப்போது மடக்கிவிட்டான் என்றால் என்ன செய்வது? எப்படிச் சமாளிப்பது? 
என்ற எண்ண ஓட்டத்துடன் கான்ட்டீனுக்குள் நுழைந்தவன் ...  மாணவர்கள்
கூட்டமாக இருந்ததால் இந்தக் கூட்டத்துக்குள் பிரகாஷ் என்னை எப்படிப்
பார்க்கமுடியும் என்று நினைத்து என்னை சமாதனப் படுத்திக்கொண்டு ஒரு ப்ளேட்
தக்காளி சாதத்தை வாங்கிக்கொண்டு ஒரு மூலையில் இருந்த டேபிளுக்கு சென்று
சாப்பிட ஆரம்பித்தேன்.  என் வகுப்பில் மாணவர்களோடு இன்னும் கலந்து
பழகாததால் தனித்தே இருந்தேன் நான்.  

அப்போது "ஹலோ.. என்ன தனியா வந்துட்டே?"  என்று கேட்டபடி என் அருகில் வந்தான் கணேசன். என் வகுப்பில் தான் படிக்கிறான். 

இன்னும் சொல்லப்போனால் எனக்கு பக்கத்து சீட் தான் அவன்.

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லே.  இன்னிக்கு தானே பர்ஸ்ட் டே. இன்னும் யாரும் பழக்கமாகலேயே.  அதனாலேதான்" என்றேன் நான்.

"இப்போ நான் பழக்கமாகிக்கலாமா?' என்றான் கணேசன்.

" why not? கண்டிப்பா" என்றேன் நான்.  இருவரும் எங்களைப் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தோம்.

திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் கணேசன். பி.யு.சியை அங்கேயே முடித்தவன் இங்கு சென்னையில் அரசுப் பணியில் அவனது அண்ணன் குடும்பத்துடன் இருக்கவே, சென்னைக்கு வந்து அண்ணன் வீட்டில் தங்கிக்கொண்டு பட்டப் படிப்பை தொடர வந்திருக்கிறான்.  

சற்று பருமனான உடல்வாகு.  இளநரை தலைமுழுக்க வியாபிக்க ஆரம்பித்திருந்தது. 
நிறம் என்னைவிட கருப்பு தான்.

ஆனால் நட்புக்கு நிறம், இனம், மதம், ஜாதி இதெல்லாம் ஏது?  இருவரும் நண்பர்களாக ஆரம்பித்துவிட்டோம்.

சாப்பிட்டு முடித்துவிட்டு வாஷ் பேசினில் கை கழுவிக்கொண்டு வெளியே வந்தபோது...

பிரகாஷ் வருவதை கவனித்துவிட்டேன்.  சட்டென்று கணேசனுக்கு பின்னால் அவன் கண்ணில் படாதபடி என்னை மறைத்துக்கொண்டு நின்றுவிட்டேன்.

பிரகாஷ் தனியாக வரவில்லை..  கூட ஒரு நண்பனுடம் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே
வந்துகொண்டிருந்தான். அவசரத்தில் அந்த நண்பனை முதலில் கவனிக்கவில்லை நான்.

சட்டென்று மனசுக்குள் பொறி தட்டியது.  அவன் யார் கூடவோ தோள்மேல
கைபோட்டுகிட்டு - அவன் பதிலுக்கு பிரகாஷோட இடுப்பை சுற்றி வளைத்து
கைபோட்டுகிட்டு வரானே.  யார் அவன்..?  என்று பார்க்கலாமா.. 

வேண்டாம்.. நாம பாக்குறப்போ அவன் நம்மை கவனிச்சுட்டா எனன பண்ணுவது?

அப்படி இந்த கூட்டத்துலே நம்மை அவன் கவனிச்சுட்டா கூட்டத்துலே கலந்து
போய்விடலாம்.  என்று முடிவு செய்வதற்குள் பிரகாஷும் அந்த நண்பனும்
காண்ட்டீன் படிகளில் ஏறி உள்ளே வந்துகொண்டிருந்தார்கள்.

பிரகாஷின் இடுப்பை வளைத்து பிடித்துக்கொண்டு நெருக்கமாக வந்தவனைப் பார்த்ததும் அதிர்ந்தேன் நான்.

அவன்.. 

எனது ரூம் மேட் ராபர்ட்.

(தொடர்ந்து வரும்.)

முரட்டுச் சிங்கத்துடன் மூன்று வருடங்கள் - 2

2."தேக்கு மரம் உடலைத் தந்தது.  சின்ன யானை நடையைத் தந்தது. 
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது.  பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது. "  -
கவியரசு கண்ணதாசன்.


கல்லூரி வாசலில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சீனியர்கள் - அவர்களுக்கு நடுவே புள்ளிமானாய் மிரண்ட பார்வையுடன் ஜூனியர்கள்.


"புதுசு மாதிரி தயங்கி தயங்கி நிக்கக் கூடாது.  தைரியமா நடந்துகிட்டு ரொம்ப
பழகின இடத்துக்கு போகிறமாதிரி போய்கிட்டே இருக்கணும்."  என் ரமேஷ் நான்
பி. யு. சி. சேர்ந்த பொழுது சொல்லிக்கொடுத்த பாடம் நினைவுக்கு வர ஒரு
சீனியர் மாதிரி பாவனை பண்ணிக்கொண்டே நான் நடந்தேன்.


ஆனால் உண்மையிலேயே சீனியராக இருப்பது வேறு.  சீனியர் மாதிரி நடிப்பது
வேறு.  எனது அதீத பாவனையே என்னைக் காட்டிக் கொடுத்து விட்டிருக்கவேண்டும்.


"ஹேய்.  வா..  இங்கே" - என்று அங்கிருந்த குழுவில் ஒரு குழு என்னைக் கூப்பிட்டு அழைத்தது. 


நடுநாயகமாக நின்றிருந்தான் ஒரு மாணவன்.  அவன் தான் அந்த கூட்டத்துக்கு
லீடர் என்று அவனைச் சுற்றி இருந்த ஜால்ரா கூட்டமே காட்டிக் கொடுத்துவிட்டது. வேறு வழி இல்லாமல் அவர்களை நோக்கிச் சென்றேன் நான். 


"பிரகாஷ்..  பாவம்டா.. பச்சைப் புள்ளை மாதிரி இருக்கான்.  பால்வடியும்
முகம்டா" - சொன்னவன் நிஜமாகவே சொன்னானோ இல்லை கிண்டலுக்காக சொன்னானோ அவனுக்கே வெளிச்சம்!. 


"என்ன நீ.  விறுவிறுன்னு வேகமா போறே?.  சாருக்கு ஒரு வணக்கம் போடாம?"  என்று இன்னொரு குரல்.


"யாரு.. இங்கே ..சார்?" -  பொத்தாம் பொதுவாக ஒரு வணக்கம் போட்டுவைத்தேன் நான்.


என்னையே குறுகுறுப்பாக பார்த்தான் அந்த பிரகாஷ்.  நானும் அவனை ஒரு முறை நிமிர்ந்து நோக்கினேன்.

சீனியர் என்பதற்கு அடையாளமான
சம்பா கோதுமையில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்ட மாதிரியான நிறத்துடன் கூடிய உடற்கட்டு.  அது என்ன சீனியருக்கு என்று தனியாக உடற்கட்டு ஏதாவது இருக்கிறதா என்று கேட்காதீர்கள்.  வயதில் இரண்டு மூன்று வயது பெரியவன் இல்லையா.  ஆகவே அந்த வயதுக்கேற்ற வளர்ச்சி கட்டாயம் உடம்பில் தெரியுமே.  அவனுக்கும் அது தெரிந்தது.


இளமை மதர்த்து திமிறிய மார்பு.  வலுவேறிய தோள்கள்.  செழிப்பான புஜங்கள்.  தட்டையான வயிறு. 

அதற்கு மேல் அவனைப் பார்க்கமுடியவில்லை. 

"என்னடா.. உறுத்துப் பாக்கிறே.  என் உடம்ப சட்டை இல்லாம பாக்கணும்ன்னு தோணுதா?" -

சட்டென்று கேட்டுவிட்டான் பிரகாஷ்.

 "ம்ம்.  இல்லே.. வந்து.."  என்று திக்கித் திணறினேன் நான்.


கிட்டே வந்து என் தோளில் கைவைத்து பின்னால் தள்ளியவன், "பாருடா.. நல்லா
பாரு." என்று சட்டையை கழற்றிவிட்டு திறந்த மார்புடன் நின்றே விட்டான் அவன்.


இதற்குள் சுதாரித்துக்கொண்ட நான் பகபகவென்று சிரிக்க ஆரம்பித்தேன்.


பிரகாஷும், அவனது கூட்டமும் திகைத்துப் போனார்கள்.


"ஏண்டா சிரிக்கறே?" என்றான் பிரகாஷ்.  குரலில் எரிச்சல் கலந்திருந்தது.


"இல்லே.  பொதுவா ராக்கிங்க்லே சீனியர்ஸ் தான் எங்களை மாதிரி புதுப் பசங்களை சட்டைய கழட்டச் சொல்லி - மானத்தை வாங்குவாங்க.  ஆனா இங்கே ஒரு ஜூனியர் முன்னாலே சட்டைய கழட்டிக் காட்டுற சீனியரை இன்னிக்கு தான் பாக்குறேன்." என்று தைரியமாக சொல்லிவிட்டேன் நான்.


அந்த சின்னக் குழுவே விக்கித்து நின்றது. 

சுதாரித்துக்கொண்ட பிரகாஷ் என்னை பார்த்து கை நீட்டி ஏதோ சொல்லவரவும், காலேஜ் துவங்குவதற்கான மணி ரிங்காகவும் சரியாக இருந்தது. 


"டயம் இருந்தா ஆப்டர்நூன் சந்திப்போம்." என்று சொல்லிவிட்டு நான்
அங்கிருந்து சிட்டாக பறந்து எனது வகுப்பை நோக்கி வேகவேகமாக போய்விட்டேன்.


ஆனாலும் -
என் மனக்கண் முன்னால் -  முன் வெகு அருகில் தெரிந்த பிரகாஷின் கட்டுடல் - 
மன்மதத் தனமாக மதர்த்து செழித்திருந்த அந்த மார்பு..  அதில் அலையாக பரவிய
மெல்லிய ரோமமும், வட்டவடிவான முலைகளும், அதில் புள்ளிவைத்து அழுத்தியது போல இருந்த காம்புகளும்... - அழுத்தமாக பதிந்து...


"இவன் மட்டும் என்னை இறுக்கி ஒரு அணை அணைச்சா எப்படி இருக்கும்?"  -
சட்டென்று எழுந்த நினைவலைக்கு லகான் போட்டபடி வகுப்புக்குள் நுழைந்தேன்
நான்.

(தொடர்ந்து வரும்..)

முரட்டுச் சிங்கத்துடன் மூன்று வருடங்கள்- 1

1.  "கண்முன்பு அழகான ஆண்மை நான் கல் அல்ல கனிவான பெண்மை"  -  கவியரசு கண்ணதாசன்.

ஒரு வழியாக பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு, பி.யு. சி யிலும்
உன்னைப்பிடி என்னைப்பிடி என்று பார்டர் மார்க்குகள் எடுத்து
பாசாகிவிட்டேன்.
 
நான் படிப்பைப் பொறுத்தவரை அப்படி ஒன்றும் ப்ரில்லியன்ட் ஸ்டூடன்ட் கிடையாது.  அதனால் எனக்கு பி. ஏ. வில் தான் இடம் கிடைத்தது.  அதே சமயம் என் அப்பாவுக்கு பணியில் இடமாற்றமும் கிடைத்தது.  அதனால் நான் ஹாஸ்டலில் தங்கி கல்லூரியில் படிப்பது என்று முடிவானது. 


ஆகவே நான் சென்னையிலும் என் பெற்றோர் கும்பகோணத்திலும் இருப்பது என்று முடிவெடுக்கப்பட்டு நான் சென்னையிலேயே
கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படிக்க ஆரம்பித்தேன்.

முதல் நாள் என் அப்பா என் கூட வந்து ஹாஸ்டலை பார்வையிட்டார்.  எனது அறையில் என் கூட இருப்பவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள

ஆரம்பித்தார்.  பெற்றவர்களின் கவலையே தனி.   மகனுக்கு ஏற்படும் புதிய சிநேகிதங்கள் எப்படி அமைகின்றன என்பது தானே அவனது
எதிர்காலத்தையே தீர்மானிக்கின்றன.?
 அப்போது அறிமுகமானவன் தான் ராபர்ட்.   எனக்கு ஒரு வருடம் சீனியர். 

மாநிறம்.   அதே சமயம்  கட்டுடல்.  திட்டமான மீசை.  சின்னக் கண்கள்.  ஆனால் அந்தக் கண்களின் பார்வை பார்ப்பவர்களை கட்டிப்போடும்.


என் அப்பாவிடம் மிகுந்த மரியாதையுடன் " அங்கிள் அங்கிள்" என்று அழைத்துப் பழகினான் அவன். அப்பாவுக்கு அவனை மிகவும் பிடித்துப்


போனது.  சரளமான ஆங்கிலத்தில் அவருடன் உரையாடினான்.  என் அப்பாவுக்கு யாராவது ஆங்கிலத்தில் பேசினால் ரொம்பவும் பிடிக்கும்.


(எதிர் வீட்டு மோகனை அவருக்கு மிகவும் பிடிக்க அவனது சரளமான ஆங்கிலப் பேச்சும் ஒரு காரணம்).  அந்த வகையில் ராபர்டையும் அவருக்கு


பிடித்துப்போனது.



எனக்கும் அவனை ரொம்பப் பிடித்துப் போனது.  காரணம் அவனது உடம்பு.  வயதுக்கு மீறிய வளர்த்தி உடம்பின் எல்லா அங்கங்களிலும் தெரிந்தது.


நிறம் என்னவோ கம்மிதான்.  மோகனைப்போல அடிக்க வரும் சிவப்போ, ரமேஷைப் போல சந்தன நிற மேனியோ அல்ல. 


மாநிறம் தான்.  ஆனால் அந்த முகத்தில் வசீகரம் இருந்தது.  பார்வையில் ஒரு
அலட்சியமும், அடுத்தவரைச் சுண்டி இழுக்கும் தன்மையும் இருந்தது.


யாரானாலும் சரி.. சட்டென்று சிநேகம் செய்துகொள்ளவேண்டும் என்று தோன்றிவிடும்.  எனக்கும் தோன்றியது.  வெறும் சிநேகத்தோடு இது


இருந்துவிடக்கூடாது.  அதற்கும் மேலே கூட போகவேண்டும் என்று கூடத் தோன்றிவிட்டது.


என் மன ஓட்டத்துக்கு ஒரு லகான் போட்டது போல என் அப்பாவின் பேச்சு - என்னை நிதர்சனத்துக்கு கொண்டு வந்தது.


 "ரொம்ப டீசன்ட்டான பையன்.  நான் என்னமோ ரொம்ப பயந்துக்கிட்டு இருந்தேன்ப்பா.  தனியா இவன் எப்படி இருக்கப் போறானோ
கூடத் தங்கற பசங்க நல்லவங்களா இருக்கணுமே என்று கவலையா இருந்தது.  உன்னைப் பார்த்ததும் அந்தக் கவலை போயிடுச்சு  ராபர்ட்.  இவனை கவனமா பார்த்துக்க.  இவனுக்கு ஒரு அண்ணன் மாதிரி இருந்து கெட்டுப்போகாம கண்டிப்பா இருந்து படிப்போட நாலு நல்ல பழக்க
வழக்கங்களையும் சொல்லிக்கொடு.  இவனுக்கு அதெல்லாம் ஒரு எழவும் தெரியாது".  என்று பேசிக்கொண்டே போனார் அவர்.


அவரது கவலை அவருக்கு.   மூத்த மகன்.  நல்லபடியாகப் படித்து முன்னுக்கு வரவேண்டுமே என்று எல்லா அப்பாக்களுக்கும் இருக்கும் கவலை
அக்கறை அவருக்கும் இருந்தது. 

"டோன்ட் வொர்ரி அங்கிள்.  ஐ வில் டேக் கேர். கண்டிப்பா என் தம்பி மாதிரியே
பாத்துக்குறேன்"  என்ற ராபர்ட்டின் உறுதி மொழியில் அவருக்கு
நம்பிக்கை வர,  புகுந்த வீட்டில் பெண்ணை விட்டுவிட்டுப் போகும் தந்தையைப் போல விடை பெற்றுச் சென்றார் அவர்.

அவர் சென்றதும் என்னை ஒருமுறை உற்றுப் பார்த்தான் ராபர்ட். 


"என்ன அப்படி பாக்குறே?" என்றேன் நான்.  

உடனே,"ஹேய்.  என்ன இது.  மரியாதை இல்லாம பேசறே.  நான் உனக்கு சீனியர்.  எல்லா விதத்துலேயும். வயசுலே கூட பெரியவன். 
இப்படித்தான் மரியாதை இல்லாம ஒருமையிலே பேசறதா?"  என்ற அவன் குரலில் இருந்த கண்டிப்பு என்னை விதிர்விதித்து போக வைத்தது.

"சாரி.  இனிமேல் அப்படி பேசமாட்டேன்.  உங்களை அண்ணான்னு கூப்பிடட்டுமா?" என்றேன் நான்.


"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.  ராபர்ட்டுன்னு பெயர் சொல்லியே கூப்பிடு.  பட்.. மரியாதையோட "நீங்க வாங்க" போட்டு பேசு." என்றான் அவன்.


சரிஎன்று தலையை ஆட்டினேன் நான்.


"அதுசரி.. முதல் நாளே காலேஜுக்கு லேட்டா போகாதே.  நேரமாகுது.  கிளம்பு.  மத்ததை சாயங்காலம் பேசிக்கலாம்" என்றான் ராபர்ட்.


சரி என்று கிளம்பி கல்லூரிக்கு சென்றேன் நான்.   போகும் பொழுது வழியெல்லாம் மனசுக்குள் பயம் சிலந்திக்கூடாக அடைக்க ஆரம்பித்தது.


"முதல் நாள்..  ராகிங் பண்ணுவாங்களே.  எப்படி எல்லாம் இருக்குமோ?" என்ற
கவலையும், பயமும் பாடாகப் படுத்த கல்லூரி வாசலில் காலெடுத்து வைத்தேன்
நான்.

(
தொடர்ந்து வரும்..)