பத்து நிமிடங்கள் முழுசாக நகர்ந்தன.
இப்போது குளியலறையில் இருந்து இடையில் சுற்றிய டவலுடன் வெளியே வந்தவன்..
என்னைப் பார்த்து சிநேகமாய் புன்னகைத்து விட்டு டிரெஸ்ஸிங் டேபிளின் முன்னே
சென்று தலை சீவிக்கொண்டு டெனிம் பவுடரை லேசாக பின்கழுத்திலும்,
அக்குல்களிலும் தடவிக்கொண்டு முகத்திலும் லேசாகத் தடவிக்கொண்டு..
அங்கிருந்த அவனது ப்ரீப்கேசைத் திறந்து புதிய ஜட்டி ஒன்றை எடுத்து டவலைக்
கழட்டாமல் அணிந்து கொண்டவன்... கட்டிலில் என் அருகில் ஒட்டினாற்போல
அமர்ந்துகொண்டான்.
"வெல். உங்களை ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைத்துவிட்டேன் என்று நினைக்கிறேன்." என்றான் அவன்.
எச்சிலை மிடறு விழுங்கிக்கொண்டே.."நோ நோ.. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை." - என்றேன் நான்.
"ஓகே.. சொல்லுங்க.. " என்றான் அவன்.
அடுத்த அரை மணிநேரம் வெகு சீரியசாக நான் மார்கெட்டிங் செய்யும் பொருட்களை
பற்றி, அவற்றை விற்பனை செய்யும் கம்பெனியின் நம்பகத்தன்மை பற்றி, அவை
வேலை செய்யும் திறம் பற்றி.... என்று எல்லாம் அவனது கண்களை நேருக்கு
நேராகப் பார்த்துக்கொண்டே நான் பேசினேன். அவனும் மிகுந்த ஆர்வத்தோடு
கேட்டுக்கொண்டே வந்தான்.
இடை இடையில் அவனுக்கு எழுந்த சந்தேகங்களை எல்லாம் அவன் கேட்க நானும் அவற்றை
தீர்த்துவைக்க.. ப்ராடக்ட் கேட்லாக்கை கேட்டான். அப்படியே என் மடியில்
இருந்து அவன் மடிக்கு அதை மாற்றும் போது..... அவனது விரல்கள் என் தொடையை
வருடி மீண்டது போல எனக்கு தோன்றியது.
கேட்லாக்கை வாங்கிப் புரட்டும் போது என் தொடையோடு அவன் தொடை
ஒட்டிக்கொள்ள.. வெகு சுவாதீனமாக அவன் சுட்டிக்காட்டி கேட்ட பொருட்களின்
விலையை சொல்ல...
சற்று நேரம் மௌனம்.
அதன் பிறகு... அவன் சுட்டிக்காட்டிய ஹெல்த் கேர் ப்ராடக்ட்களின் விலைகளை
நான் கூட்டி மொத்தத் தொகையைச் சொல்ல... சட்டென்று எழுந்து சென்றவன் அவனது
ப்ரீப்கேசைத் திறந்து
செக் புக்கை எடுத்து அந்தத் தொகைக்கு ஒரு காசோலையை எழுதி கையெழுத்திட்டு "ப்ராடக்ட்ஸ் எப்போ கிடைக்கும்?" என்று கேட்டான் அவன்.
"நாளைக்கே நான் வந்து உங்களுக்கு பொருட்களை கொடுத்துவிடுகிறேன். ஆல் ஆர் ரெடிலி அவைலபிள் அட் அவர் ஸ்டாக் பாயிண்ட்" என்றேன் நான்.
"ஓகே.." என்றபடி அந்த காசோலையை என்னிடம் நீட்டினான்.
அசந்தே போனேன் நான். பிறகென்ன?
நான் எதிர்பார்த்து வந்தது என்னவோ .. ஜஸ்ட் ஒன்று அல்லது இரண்டு
பொருட்களில் இன்ட்ரஸ்ட் காட்டுவான் என்று..ஆனால் இப்படி ஒரே நேரத்தில்
பெரிய ஆர்டராகக் கொடுப்பான்.. அதுவும் கைமேலே. என்று சத்தியமாக நான்
எதிர்பார்க்கவே இல்லை.
அந்த டீலிங்கில் எனக்கு ஒரேயடியாக இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் லாபம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
மனம் நிறைவானது.
"ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர் அருண். " என்றேன் நான்.
"தட் இஸ் ஆல் ரைட்" என்று சிநேகமாக புன்னகைத்தான் அவன்.
"அருண்.. ஒரு சின்ன சந்தேகம் கேட்கலாமா?" என்றேன் நான்.
"கோ அஹெட். " என்றான் அவன்.
நான் கேட்டேன். " நீங்க படு ஸ்மார்டா இருக்கீங்க. சின்ன வயசும் கூட..
அப்படி இருக்கறப்போ எதுக்காக இந்த ஹெல்த் கேர் ப்ராடக்ட்ஸ் வாங்கறீங்க?'
என்றேன் நான்.
என்னையே ஒரு கணம்..உற்றுப் பார்த்தவன்..
"என் வயசு என்ன இருக்கும் என்று நீ நினைக்கிறே?" என்று எதிர்க் கேள்வி
கேட்டான். சட்டேன்று அவன் "நீங்க"வில் இருந்து "நீ"க்கு மாறியதை கண்டும்
காணாமல்
"என்ன ஒரு இருபத்தெட்டு இருக்குமா?" என்று கேட்டேன் நான்.
மறுப்பதுபோல தலையை அசைத்தவன்.. "என் ஏஜ் முப்பத்து நாலு" என்றான்.
ஆச்சரியம் படுபவன் போன்ற முக பாவத்துடன், "இஸ் இட். நம்பவே முடியலே" என்றேன் நான்.
ஆச்சரியம் படுபவன் போன்ற முக பாவத்துடன், "இஸ் இட். நம்பவே முடியலே" என்றேன் நான்.
"எஸ். மாரேஜ் கூட ஆயுடிச்சு.." என்றான் அவன்.
"அப்படியா.. நம்பவே முடியலே!" - வேண்டும் என்றே ஆச்சரியம் காட்டினேன்
நான். பிசினஸ் வெற்றிகரமாக முடிந்து விட்டதே. இனி அடுத்த நோக்கமும் நிறைவேற வேண்டாமா?
"ஏன்..அப்படி சொல்லறே?" என்றான் அருண்..
ஆஹா.. நெருங்கி வரான்..நெருங்கி வரான்.. என்று மனசுக்குள் சந்தோசம் மத்தளம் கொட்டினாலும் அதை மறைத்துக்கொண்டு பேசினேன் நான்.
"இந்த ஆம்பிளைங்களை பத்தி ஒன்னு சொல்லறேன் கேளுங்க அருண். மாரேஜ் ஆகறதுக்கு முன்னாலே ஜிம்முக்கு கிம்முக்கு எல்லாம் போய் பாடிய கும்முன்னு ஏத்திக்கிட்டு இருப்பானுங்க. கல்யாணம் ஆயி ஒரு வருஷம் கழிச்சு பாருங்க. அதே ஆம்பிளை.. முன் நெத்தியிலே முடி கொட்டி... வயிறு முன்னாலே வந்து தொப்பை எல்லாம் விழுந்து பாக்கறதுக்கு மூஞ்சூறு இல்லாம பிள்ளையார் வாக்கிங் போறமாதிரி இருப்பானுங்க." என்றேன் நான்.
குபுக்கென்று சிரித்துவிட்டான் அருண்.
சிரிப்பு அடங்கியதும்.. "நீ நல்லா பேசறே?" என்றான் அவன். அப்போது அவன் கை என் தோளின் மீது விழுந்து அதை தடவ ஆரம்பித்தது.
"நீங்க மட்டும் என்ன? ரொம்ப நல்லா .. செம மான்லியா இருக்கீங்க." சட்டென்று மனதில் நினைத்ததை பளிச்சென்று சொல்லிவிட்டேன் நான்.
ஒரு நிமிடம் என்னை உற்றுப்பார்த்தான் அருண்.
அந்த ஒரு நிமிடம் மௌனம் எங்களிடையே நிலவியது.
அடுத்து அவன் கேட்ட கேள்வி என்னை உற்சாகத்தில் துள்ள வைத்தது.
"ஹேய்.. நொவ்..வி ஆர் பிரெண்ட்ஸ். ஏன் கூட இப்போ இருந்துடேன். நெறைய பேசிக்கிட்டு நெறைய விஷையங்கள் ஷேர் பண்ணிக்கிட்டு.. காலையிலே போகலாமே?"
(அப்புறம்....???)
No comments:
Post a Comment