Wednesday, February 12, 2014

அணைக்க அணைக்க அருண்... 1

பொதுவாக நம்மில் அனைவருக்குமே அதிகமாகச் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் வரும்.

எனக்கும் வந்தது.

பார்ட் டைம் உத்தியோகம் ஏதாவது பார்த்தால் என்ன என்று தோன்றும்.  

எனக்கும்
 தோன்றியது.

ஆகவே நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்துடன் என்னை இணைத்துக்கொண்டு அதன் 
ஹெல்த் கேர்ப்ராடக்டுகளை விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.  பொருட்கள் உண்மையிலேயே தரமானதாகஅமைந்தமையால் எனது தொடர்புகள் விரிவடைய ஆரம்பித்தன.

அப்படி எனக்கு என்னுடைய டாக்டர் நண்பர் ஒருவர் மூலம் சென்னையில் இருந்த 
அருண்குமார்என்ற அருணின் தொலைபேசி இலக்கம் கிடைத்ததுதொடர்பு கொண்டேன்

"வருகிற சனிக்கிழமை நான் கோயமுத்தூர் வரேன்.  அப்போது நாம் சந்திக்கலாம்என்றான்
அருண்

பேசிய போது குரலில் ஆண்மை தெறித்தது.  அந்தக்  குரலைக்  கேட்டதுமே  எனக்குள்  ஒரு சிலிர்ப்பு  ஏற்பட்டு  மறைந்தது.  

“குரலே இப்படி  செம  மேன்லியா  இருக்கே?   ஆளு எப்படி  இருப்பான்?”   என்ற  எண்ணம்  தோன்றி  மறைந்தது.
  
“சரி.  சனிக்கிழமை  வந்தால்  தெரிந்துவிடுமே.  அது  வரை  வெயிட்  பண்ணுவோம்"  – என்று  நினைத்த  நான்  இரண்டு  நாள்  சும்மா  இருந்தேன்.   

மறுபடி அந்த  வெள்ளிக்கிழமை  மாலையில் அருணுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன்.

அலுவலக  வேலையாக அவனது மறுநாள் வருகையை உறுதி செய்தவன் "நாளைக்கு நைட் எட்டரை மணிக்கு மேல நான் ப்ரீதான்.  நெக்ஸ்ட்டே தான் சென்னை திரும்புறேன்.  ஆகவே
நீங்க வந்தீங்கன்னா உங்க ப்ராடக்ட்ஸ் பற்றி டிடைலா டிஸ்கஸ் பண்ணலாம்" - என்றான் அவன்.

சரி என்று சொல்லிவிட்டு - ஒரு நிமிடம் மனசுக்குள் திட்டமிட்டேன்.

"இரவு எட்டரை மணிக்கு மேல் என்றால் வீடு திரும்ப கண்டிப்பாக பத்து மணிக்கு மேல
ஆகிடும்.  ஆகவே இரவு உணவை முடித்துக் கொண்டே சென்றுவிடுவோம்" என்று முடிவெடுத்தேன்.

வீட்டில் யாரும் இல்லை. எல்லாரும் விடுமுறைக்காக பெங்களுர் சென்றிருக்கிறார்கள்.  

ஆகவே ஹோட்டலில் இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு. வீட்டுக்கு வந்து -  பிரெஷாக ஒரு குளியலைப் போட்டுவிட்டு - முதல் முதலாக அருணை வியாபார நிமித்தமாக சந்திக்கப் போகிறேன்.  அவன் எனது வாடிக்கையாளராக மாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறதே.  ஆகவே பளிச்சென்று தெரியவேண்டாமா?  அதற்காகத் தான் இந்தக் குளியல்.

நான் மார்கெட்டிங் செய்யும் நிறுவனத்தின் ப்ராடக்ட் காட்லாக், இதர விபரங்கள்
அடங்கிய கோப்புகளை ஒரு ப்ரீப்கேஸில் எடுத்துக்கொண்டு ஆட்டோ பிடித்து -
உடைகள் கசங்காமல் இருக்கவேண்டுமே - அதனால் தான் ஆட்டோ பயணம் -  
பயணித்து ஹோட்டல் ரெசிடேன்சியை நான் அடைந்த போது மணி இரவு எட்டே முக்கால் ஆகிவிட்டிருந்தது. 

அவினாசி சாலையில் இருந்த அந்த பிரம்மாண்டமான நட்சத்திர ஹோட்டலுக்குள் கையில் பிரீப் கேசுடன் நுழைந்தேன் நான்.

வரவேற்பில் அருணின் அறை எண்ணை விசாரித்து  தெரிந்து கொண்டு 

மின்னுயர்த்தியில் பயணித்து இரண்டாவது மாடியில் இருந்த அருணின் அறையை 

அடைந்து அழைப்பு மணியை அழுத்தினேன்.

அடுத்த இரண்டு நொடிக்குள் அரைக் கதவம் திறந்தது.    பான்ட் - கட் பனியனுடன் கதவை திறந்த அவனுடைய உடற்கட்டில் ஆண்மை கொப்புளித்து திமிறிக்கொண்டிருந்தது.

"மிஸ்டர் அருண்..?"  என்ற என் கேள்விக்கு ..  "எஸ்" என்று பதில் வந்ததும் என்னை அறிமுகம் செய்து கொண்டேன் நான்.

"உள்ளே வாங்க.." என்று கை குலுக்கியபடி என்னை வரவேற்றவன் நான் உள்ளே நுழைந்ததும் கதவை தாழிட்டான்.

(அணைப்பு தொடரும்..)

No comments:

Post a Comment