Sunday, March 8, 2009

மீண்டும் மோகனுடன்.... 2

அன்று மாலை என் தந்தை அலுவலகம் விட்டு வீடு வந்ததும் அவரை பார்க்க வந்து விட்டான் மோகன்.
என் பெற்றோருக்கு அவனை மிகவும் பிடிக்கும்.
"நல்ல பையன்"
"ரொம்ப கண்ணியமானவன்"
"பொறுப்பான பையன்"
"வெகு புத்திசாலி"
- இதெல்லாம் என் பெற்றோர் மோகனுக்கு வாசித்திருந்த பாராட்டு பத்திரங்கள்.
ஆகவே அவன் வந்ததும் மலர்ச்சியோடு வரவேற்றனர்.
"என்ன அங்கிள். உங்க சன் பரீட்சை எல்லாம் எப்படி எழுதி இருக்கானாம்?
"அவன் இந்த தடவை நல்ல மார்க்ஸ் எடுத்தான் என்றால் தட் கிரெடிட் கோஸ் ஒன்லி டு யு மோகன்" - என்றார் அவர்.
"சே சே.. நான் அப்படி என்ன பெரிசா பண்ணிட்டேன்? ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொல்லிக்கொடுத்தேன். அவனும் சரியா கத்துக்கிட்டான். ஆனாலும் அங்கிள் அவன் கத்துக்க வேண்டியது இன்னும் நெறைய இருக்கு!" - என்னை குறும்பாக பார்த்தபடியே உள்ளர்த்தம் வைத்து பேசினான் மோகன்.
"நீ சொல்வதும் சரிதான் மோகன். அவன் இன்னும் சின்ன பையனாத்தான் இருக்கான்." - என்றார் என் அப்பா.
"லீவ் விட்டாச்சே. ஊருக்கு எங்கேயும் போகலையா?" - என்று ஆரம்பித்தான் மோகன்.
"போகணும். இப்போ தானே லீவ் ஆரம்பிச்சு இருக்கு. அடுத்த மாதம் முதல் வாரத்துலே எங்க சொந்த ஊருக்கு அனுப்பலாம் என்று இருக்கேன்" என்றார் அப்பா.
அங்கிள் . நான் ஒரு ரெண்டு நாளைக்கு திருச்சி போகிறேன். இவனையும் கூட்டிகிட்டு போகட்டுமா? அவனுக்கும் புதுசா ஒரு இடத்தை பார்த்த மாதிரியும் இருக்கும். நாலு விஷயம் கத்துகிட்ட மாதிரியும் இருக்குமே" - என்று கேட்டான் மோகன்.
அசந்து போனேன் நான். என்ன சாமர்த்தியம் என்று வியந்து போனேன் நான்.
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மோகன். பாவம் உனக்கேன் வீண் சிரமம்?" என்று மறுத்தார் என் அப்பா.
ஆனால் மோகன் விடவில்லை. "இதுலே என்ன சிரமம் இருக்கு அங்கிள். நான் என்ன உங்க மகனை தலையிலேயா சுமந்துகிட்டு போக போகிறேன். அவன் என் தம்பி மாதிரி. அவன் மேல் எனக்கு தனி ஈடுபாடு. நல்ல பையன். பட் அப்பாவியா இருக்கான். நாலு இடத்துக்கு கூட்டிகிட்டு போய் நமக்கு தெரிஞ்ச நல்லது கேட்டதை சொல்லி கொடுக்கறதுலே என்ன கொறஞ்சு போவ போகுது?"
அவன் பேசியதும் அப்படியே இளகி போய் விட்டார் என் அப்பா.
"ஆமாம் மோகன். நீ சொல்லுறதும் சரிதான். உன்னை மாதிரி படிச்சு விவரம் தெரிஞ்சவங்க கூட பழகினால் தானே அவனும் முன்னுக்கு வர முடியும். பத்திரமா கூட்டிகிட்டு போய் விட்டு வந்துடு." - சம்மதம் கொடுத்தார் அப்பா.
கூடவே "இவனுக்கு விவரம் பத்தாது. நீ தான் உனக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லிகொடுக்கனும்." என்று வேண்டுகோளும் விடுத்தார்.
"கண்டிப்பாக . நான் எல்லாத்தையும் சொல்லிக்கொடுக்குறேன்" - என்னை குறும்பாக பார்த்தபடி சம்மதம் வாங்கி விட்ட சந்தோஷத்தில் வெளியேறினான் மோகன்.
மறு நாள் இரவு பத்தரை மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் அந்த சொகுசு பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் நானும் எனக்கு அடுத்து மோகனும் அமர்ந்து கொண்டதும்...
என்னை பார்த்து திடீர் என்று சிரிக்க தொடங்கினான் மோகன்.
"ஏன் சிரிக்குறீங்க?"- புரியாமல் கேட்டேன் நான்.
"ஒன்னும் இல்லே. உங்க அப்பா சொன்னதை நெனைச்சுகிட்டேன். சிரிப்பு வந்துது" என்றான் அவன்.
"இப்படி சிரிப்பு வரமாதிரி என்ன சொன்னாராம் என் அப்பா?" - என்று கேட்டேன் நான்.
"உனக்கு விவரம் பத்தாது. நான் தான் எல்லாம் சொல்லிக்கொடுக்கணும் என்றாரே. பாடத்தை இப்பவே தொடங்கிடட்டுமா?" - கண் சிமிட்டியபடி குறும்பாக கேட்டபடி புன்னகைத்தான் மோகன்.
"சீ. போங்க.." என்று செல்லமாக கடிந்து கொண்டபடியே அவனுடைய வலுவான
புஜத்தில் மென்மையாக முத்தமிட்டேன் நான்.
ஒரு இனிய விளையாட்டை அவன் தொடங்குவதற்கு வசதியாக அந்த சொகுசு பேருந்து - தன் பயணத்தை துவங்கியது.
(தொடரும்....)

No comments:

Post a Comment